கோடியில் ஒருவன் விமர்சனம்
விஜய் ஆண்டனி,சூப்பர் சுப்பராயன்
Samayam Tamil 17 Sep 2021, 12:35 pm
கோடியில் ஒருவன் படத்தின் முதல் பாதியில் நிறைய மசாலா வைத்திருக்கிறார்கள். கொம்பையில் படம் துவங்குகிறது. உள்ளூர் தேர்தலில் போட்டியிடுமாறு ஒரு இளம் பெண்ணை பெரிய ஆள் கேட்பதுடன் படம் துவங்குகிறது. அந்த தொகுதி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால் தனக்கு சரிபட்டு வரும் நபரை போட்டியிட வைக்க விரும்புகிறார். ஆனால் அந்த பெண் துணிச்சலானவர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த அதிகாரம் படைத்த நபரின் திட்டப்படி எல்லாம் அவர் நடக்கவில்லை. அதனால் அந்த பெண்ணை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதுடன், குழந்தை பெறுகிறார் அந்த பெண். அந்த குழந்தை அவரை மரணத்தில் இருந்து மீட்டு வருகிறது.
முதல் 15 நிமிடங்களில் ஹீரோ விஜயராகவன் (விஜய் ஆண்டனி) பற்றி கூறுகிறார் ஆனந்த கிருஷ்ணன். அதனால் விஜயராகவன் தன் தாயின் கனவை நிறைவேற்றி வைக்க ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக சென்னைக்கு வரும்போதே இந்த அவதார புருஷன் லேசுப்பட்ட ஆள் இல்லை என்பது நமக்கு ஏற்கனவே தெரிகிறது.
நல்லதே செய்யும் விஜயராகவன் சென்னையில் தான் தங்கியிருக்கும் பகுதி மக்களிடம் நல்லபெயர் எடுக்கிறார். அங்கிருக்கும் இளசுகளை நல்வழிப்படுத்துகிறார். விரைவில் உள்ளூர் கவுன்சிலர்(சூப்பர் சுப்பராயன்) மற்றும் அவரின் அடியாளர்களான சுல்லு, கான்ஃபரன்ஸ் கருணா(பிரபாகர்) ஆகியோரின் பகையை சம்பாதிக்கிறார்.
கவுன்சிலரின் முதலாளியும், பெரும் அரசியல் புள்ளியுமான பெத்த பெருமாளை(ராமசந்திர ராஜு) பகைத்துக் கொண்ட பிறகும் விஜயராகவனால் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியுமா?
தாய்-மகன் இடையேயான உறவை ஆனந்த கிருஷ்ணன் காட்டிய விதம் தான் கோடியில் ஒருவனை தாங்கிப் பிடிக்கிறது. பிச்சைக்காரனில் அம்மா சென்டிமென்ட் விஜய் ஆண்டனிக்கு பெரிதும் கை கொடுத்தது. அதனால் அந்த ஸ்க்ரிப்ட்டை விஜய் ஆண்டனி மீண்டும் தேர்வு செய்ததில் ஆச்சரியம் இல்லை.
ஹீரோவின் பொறுமையை சோதித்து அவரை வம்புக்கு இழுக்கும் தருணங்களில் அவர் எப்பொழுது பொங்குவார் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஹீரோ பொங்கி எழுந்த பிறகு நடப்பது தான் கோடியில் ஒருவனை தனியாக காட்டுகிறது.
இரண்டாம் பாதியில் வேறு படத்தை பார்ப்பது போன்று இருக்கிறது. திரைக்கதை மாறிவிட்டது. ஒன் மேன் ஷோவாக ஆகிவிடுகிறது. திரைக்கதை திடீர் என்று சொதப்பலாகிவிட்டது. முதல் பாதியை போன்று இரண்டாவது பாதியில் வில்லன்கள் கூட பெரிய பிரச்சனையாக இல்லை. பெரிதாக பில்ட்அப் கொடுக்கப்பட்ட பெத்த பெருமாள் டம்மி பீஸாகிவிடுகிறார்.
விஜய் ஆண்டனியின் நடிப்பு முதல் பாதியை போன்று இரண்டாவது பாதியில் பொருத்தமாக இல்லை. பயங்கரமாக பில்ட்அப் கொடுத்துவிட்டு இறுதியில் அவசரமாக முடிக்கப்பட்டது போன்று இருக்கிறது. அம்மா சென்டிமென்ட் மட்டுமே படத்தை காப்பாற்றியிருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த அதிகாரம் படைத்த நபரின் திட்டப்படி எல்லாம் அவர் நடக்கவில்லை. அதனால் அந்த பெண்ணை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதுடன், குழந்தை பெறுகிறார் அந்த பெண். அந்த குழந்தை அவரை மரணத்தில் இருந்து மீட்டு வருகிறது.
முதல் 15 நிமிடங்களில் ஹீரோ விஜயராகவன் (விஜய் ஆண்டனி) பற்றி கூறுகிறார் ஆனந்த கிருஷ்ணன். அதனால் விஜயராகவன் தன் தாயின் கனவை நிறைவேற்றி வைக்க ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக சென்னைக்கு வரும்போதே இந்த அவதார புருஷன் லேசுப்பட்ட ஆள் இல்லை என்பது நமக்கு ஏற்கனவே தெரிகிறது.
நல்லதே செய்யும் விஜயராகவன் சென்னையில் தான் தங்கியிருக்கும் பகுதி மக்களிடம் நல்லபெயர் எடுக்கிறார். அங்கிருக்கும் இளசுகளை நல்வழிப்படுத்துகிறார். விரைவில் உள்ளூர் கவுன்சிலர்(சூப்பர் சுப்பராயன்) மற்றும் அவரின் அடியாளர்களான சுல்லு, கான்ஃபரன்ஸ் கருணா(பிரபாகர்) ஆகியோரின் பகையை சம்பாதிக்கிறார்.
கவுன்சிலரின் முதலாளியும், பெரும் அரசியல் புள்ளியுமான பெத்த பெருமாளை(ராமசந்திர ராஜு) பகைத்துக் கொண்ட பிறகும் விஜயராகவனால் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியுமா?
தாய்-மகன் இடையேயான உறவை ஆனந்த கிருஷ்ணன் காட்டிய விதம் தான் கோடியில் ஒருவனை தாங்கிப் பிடிக்கிறது. பிச்சைக்காரனில் அம்மா சென்டிமென்ட் விஜய் ஆண்டனிக்கு பெரிதும் கை கொடுத்தது. அதனால் அந்த ஸ்க்ரிப்ட்டை விஜய் ஆண்டனி மீண்டும் தேர்வு செய்ததில் ஆச்சரியம் இல்லை.
ஹீரோவின் பொறுமையை சோதித்து அவரை வம்புக்கு இழுக்கும் தருணங்களில் அவர் எப்பொழுது பொங்குவார் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஹீரோ பொங்கி எழுந்த பிறகு நடப்பது தான் கோடியில் ஒருவனை தனியாக காட்டுகிறது.
இரண்டாம் பாதியில் வேறு படத்தை பார்ப்பது போன்று இருக்கிறது. திரைக்கதை மாறிவிட்டது. ஒன் மேன் ஷோவாக ஆகிவிடுகிறது. திரைக்கதை திடீர் என்று சொதப்பலாகிவிட்டது. முதல் பாதியை போன்று இரண்டாவது பாதியில் வில்லன்கள் கூட பெரிய பிரச்சனையாக இல்லை. பெரிதாக பில்ட்அப் கொடுக்கப்பட்ட பெத்த பெருமாள் டம்மி பீஸாகிவிடுகிறார்.
விஜய் ஆண்டனியின் நடிப்பு முதல் பாதியை போன்று இரண்டாவது பாதியில் பொருத்தமாக இல்லை. பயங்கரமாக பில்ட்அப் கொடுத்துவிட்டு இறுதியில் அவசரமாக முடிக்கப்பட்டது போன்று இருக்கிறது. அம்மா சென்டிமென்ட் மட்டுமே படத்தை காப்பாற்றியிருக்கிறது.
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review