கே.ஜி.எஃப். 2 விமர்சனம்
யஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி
Samayam Tamil 14 Apr 2022, 9:49 am
கே.ஜி.எஃப்.பை ஆட்சி செய்கிறார் ராஜ கிருஷ்ணப்ப பைர்யா என்கிற ராக்கி பாய். அவர் உலகை ஆட்சி செய்ய விரும்பும்போது அதீரா மற்றும் ரமிகா சென் உருவத்தில் எதிரிகள் கிளம்புகிறார்கள். அதையும் தாண்டி சாதிப்பாரா?
கே.ஜி.எஃப். படத்தின் முதல் பாகத்தில் ராக்கி பாய் பவருக்கு வருவதை காட்டினார்கள். படம் முழுக்க ஸ்டைலும், மாஸுமாக இருந்தது. இரண்டாம் பாகத்திற்கு கொடுக்கப்பட்ட பில்ட்அப் படத்தில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது என்றே கூற வேண்டும்.
சிறப்பான இரண்டாம் பாகம் என்று கூறலாம். மேலும் இறுதியில் ரசிகர்களுக்கு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது.
ஆனந்தின் மகன் விஜயேந்திரா கதை சொல்வதுடன் படம் துவங்குகிறது. கே.ஜி.எஃப். மக்களை கவர்ந்துவிடுகிறார் ராக்கி. இதையடுத்து பெரிய கனவுகளுடன் மிக ஆபத்தான பாதையில் பயணிக்கிறார். அப்பொழுது தான் அதீராவை சந்திக்கிறார். கே.ஜி.எஃப்.ஐ ராக்கி பாயிடம் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறார் அதீரா.
மேலும் நியாயமான பிரதமரான ரமிகா சென்னையும் ராக்கி சமாளிக்க வேண்டியிருக்கிறது. ராக்கியை ஒரு வழி செய்ய விரும்புகிறார் ரமிகா சென். ராக்கி பாய் உச்சத்தை தொடுவதை பரபரப்பாக காட்டியிருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் ராக்கி பாயின் எமோஷனல் பகுதியை காட்டியிருக்கிறார்கள். ராக்கியின் காதல், கடந்த காலம் குறித்து அழகாக காட்டியிருக்கிறார்கள். காதல் கதை ரசிக்கும்படி இருக்கிறது. அதீராவாக வரும் சஞ்சய் தத்தின் அறிமுக காட்சி மாஸாக இருக்கிறது.
அதீரா வரும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. பிரதமராக ரவீணா டாண்டனுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. சிபிஐ அதிகாரியாக வரும் ராவ் ரமேஷின் கதாபாத்திரமும் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இது யஷ் மட்டும் அல்ல பிரசாந்த் நீலின் படமும் கூட. முதல் பாகத்தை விட சுவாரஸ்யமான இரண்டாம் பாகத்தை இருவரும் கொடுத்திருக்கிறார்கள்.
மாஸை எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றவர்களுக்கு பரம திருப்தி. இறுதியில் மூன்றாம் பாகம் வரும் என்பது போன்று ஹின்ட் கொடுத்திருக்கிறார்கள்.
கே.ஜி.எஃப்.2- சிறப்பு
கே.ஜி.எஃப். படத்தின் முதல் பாகத்தில் ராக்கி பாய் பவருக்கு வருவதை காட்டினார்கள். படம் முழுக்க ஸ்டைலும், மாஸுமாக இருந்தது. இரண்டாம் பாகத்திற்கு கொடுக்கப்பட்ட பில்ட்அப் படத்தில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது என்றே கூற வேண்டும்.
சிறப்பான இரண்டாம் பாகம் என்று கூறலாம். மேலும் இறுதியில் ரசிகர்களுக்கு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது.
ஆனந்தின் மகன் விஜயேந்திரா கதை சொல்வதுடன் படம் துவங்குகிறது. கே.ஜி.எஃப். மக்களை கவர்ந்துவிடுகிறார் ராக்கி. இதையடுத்து பெரிய கனவுகளுடன் மிக ஆபத்தான பாதையில் பயணிக்கிறார். அப்பொழுது தான் அதீராவை சந்திக்கிறார். கே.ஜி.எஃப்.ஐ ராக்கி பாயிடம் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறார் அதீரா.
மேலும் நியாயமான பிரதமரான ரமிகா சென்னையும் ராக்கி சமாளிக்க வேண்டியிருக்கிறது. ராக்கியை ஒரு வழி செய்ய விரும்புகிறார் ரமிகா சென். ராக்கி பாய் உச்சத்தை தொடுவதை பரபரப்பாக காட்டியிருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் ராக்கி பாயின் எமோஷனல் பகுதியை காட்டியிருக்கிறார்கள். ராக்கியின் காதல், கடந்த காலம் குறித்து அழகாக காட்டியிருக்கிறார்கள். காதல் கதை ரசிக்கும்படி இருக்கிறது. அதீராவாக வரும் சஞ்சய் தத்தின் அறிமுக காட்சி மாஸாக இருக்கிறது.
அதீரா வரும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. பிரதமராக ரவீணா டாண்டனுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. சிபிஐ அதிகாரியாக வரும் ராவ் ரமேஷின் கதாபாத்திரமும் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இது யஷ் மட்டும் அல்ல பிரசாந்த் நீலின் படமும் கூட. முதல் பாகத்தை விட சுவாரஸ்யமான இரண்டாம் பாகத்தை இருவரும் கொடுத்திருக்கிறார்கள்.
மாஸை எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றவர்களுக்கு பரம திருப்தி. இறுதியில் மூன்றாம் பாகம் வரும் என்பது போன்று ஹின்ட் கொடுத்திருக்கிறார்கள்.
கே.ஜி.எஃப்.2- சிறப்பு
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review