பொன்னியின் செல்வன் திரைப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குனர் மணிரத்னம் படமாக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ,விக்ரம் பிரபு , சரத்குமார் ,பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் ,திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழு கேரளா , பெங்களூர் , மும்பை என பயணித்து வருகின்றனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், பொன்னியின் செல்வன் படம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பட வெளியீட்டிற்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. படத்தின் திரைக்கதையை மணிரத்தினமும், குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஜெயமோகன் வசனத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழு கேரளா , பெங்களூர் , மும்பை என பயணித்து வருகின்றனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், பொன்னியின் செல்வன் படம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பட வெளியீட்டிற்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. படத்தின் திரைக்கதையை மணிரத்தினமும், குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஜெயமோகன் வசனத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.