ஆப்நகரம்

Mulla Jokes : நான் வந்து வந்து சென்றேன்.... யாரும் திறக்கவில்லை!

Mulla Jokes : நான் வந்து வந்து சென்றேன்.... யாரும் திறக்கவில்லை!

Samayam Tamil 13 Oct 2020, 8:18 pm
முல்லா எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார்.
Samayam Tamil sardar

முல்லா “நாளைக்கு வருகிறேன்” என்றார்.
ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் முல்லா வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார்.
“முல்லா ஏன் வரவில்லை..?” என்றார்.
“ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன்.
யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை” என்றார்.

அடுத்த செய்தி