ஆப்நகரம்

Tamil Jokes : எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால..

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 21 Oct 2019, 10:45 am
ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.
Samayam Tamil Vengallapa joke


ஜிம்மி:- "நீ எப்படி இங்கு வந்தே?"

ஜானி:- "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்துட்டேன். நீ?"

ஜிம்மி:- "என் மனைவி எனக்குத் துரோகம் செஞ்சான்னு எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவளோட கள்ளக்காதலனைப் பிடிக்க, ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தேன். அவளைக் கண்டபடி திட்டிட்டு அவனை வீடு பூராத் தேடினேன். ஆனால் எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால ஆத்திரம் அதிகமாகி எனக்கு மாரடைப்பு வந்துட்டுது".

ஜானி:- "அடடா! நீ அந்தப் பெரிய ஃபிரீஸருக்குள் தேடியிருந்தேன்னா, நாம ரெண்டு பேருமே இன்னிக்கு உயிரோடு இருந்திருக்கலாம்".

அடுத்த செய்தி