ஆப்நகரம்

அடப்பாவிங்களா, இது தெரியாம போச்சே..!

சுவாரசியமான குட்டி கதையுடன் சேர்ந்த நகைச்சுவை. சிரிக்க மட்டுமே

Samayam Tamil 16 Nov 2020, 6:38 pm
ஒருவர் காபி ஷாப் விட்டு வெளியே வரும் போது, ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலத்தை பார்த்தார். அது, ஒரு சவப்பெட்டியை முதலில் எடுத்து செல்கின்றனர். அதை, தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது. அதற்கு பின்னால், ஒரு மனிதன் கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார். அவருக்கு பின்னால், ஒரே வரிசையில் 200 ஆண்கள் நடந்து செல்கின்றனர். இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் அடக்க முடியவில்லை.
Samayam Tamil tamil joke


அவர், கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று, '' என்னை மன்னிக்கவும். உங்களை தொந்தரவு செய்வதற்கு. ஆனால், இந்த மாதிரி இறுதி ஊர்வலத்தை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால் வருகிறார்கள். இது யாருடைய இறுதி ஊர்வலம்?

முதல் சவப்பெட்டி என் மனைவியுடையது. என்ன ஆனது உங்கள் மனைவிக்கு? என்னுடைய நாய் அவளை கடித்து கொன்று விட்டது. இரண்டாவது சவப்பெட்டி?? என்னுடைய மாமியாருடையது. அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது.

25 வருஷமா ஒரே ஒரு சண்டை தானாம்!

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு, காபி ஷாப் மனிதர் அவரிடம் கேட்டார்... '' இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா"? அதற்கு அவர் சொன்ன பதில்.... பின்னால் வரும் வரிசையில் போய் நில்லுங்கள்!!!

அடுத்த செய்தி