ஆப்நகரம்

'அன்னபூரணி ஆத்தா... எங்கள மன்னிச்சிரு'...!

அன்னபூரணியையும், சென்னை திடீர் மழையை குறித்தும் நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.

Samayam Tamil 31 Dec 2021, 3:27 pm
'அன்னபூரணி அம்மாவை பகச்சிக்காதீங்கன்னு சொன்னா கேட்டதானே? அம்மா கோபிச்சுக்கிட்டாங்க. பாருங்க உடனே மழை வந்துடிச்சி. எங்கயாவது மழை பெய்யலேன்னா கூட்டிகிட்டு போய் கலாய்ங்க. அங்க நல்ல மழை வரும்' என்று கூறும் நெட்டிசன்கள் திடீர் சாமியார் அன்னபூரணிக்கும், திடீர் சென்னை மழைக்கும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
Samayam Tamil annapoorani memes



'அன்னபூரணி ஆத்தா.. எங்கள மன்னிச்சிரு.. உன் மூச்சு காத்தோட பவர் தெரியாம உன்கூட மோதிட்டோம்.. எங்க ஊர மழைல இருந்து காப்பாத்து... ங்ங்ங்....


''அன்னபூரணி போன்றோர் உருவாகாமல் தடுப்பது வலைதள சமூகத்தின் கடமை.
வலைதள சமூகம் இன்றுபோல் அன்று இருந்திருந்தால் பங்காரு, ஜக்கிகள் வளர்ந்திருக்க மாட்டார்கள்'' என்று நாங்கள் சொல்லலங்... அண்மையில் நடந்த பேட்டியில் சவுக்கு சொல்லியிருக்கார்.


''என்னிக்கு ஆதி பராசக்தி அன்னபூரணி அம்மாவைக் கிண்டல் பண்ணி மீம் போட்டாங்களோ அன்னிக்கே இந்தத் தமிழகமும் அதன் தலைநகரும் வாழும் தகுதியை இழந்துவிட்டன. அன்னையின் கண்ணீர் இன்று சென்னையில் பெருகும் தண்ணீர்''...


80'களில் கடை போட்ட மேல்மருவத்தூர் பங்காரும்,
90'களில் கடை விரித்த வேலூர் சக்தி அம்மாவும்,
2000'ல் கடை open பண்ண திருவண்ணாமலை நித்தியானந்தாவும்,

Facebook,Twitter இல்லாத காலத்தில் கால் ஊன்றியதால் தப்பித்து கடவுளாகவே நடிப்பை தொடர்ந்துவிட்டனர்!

ஆனால் அன்னபூரணி அரசு அம்மாதான் பாவம்!

அடுத்த செய்தி