ஆப்நகரம்

என்னமா கலாய்ச்சு தள்ளுறாங்க; இந்த காமெடிகளை மிஸ் பண்ணிடாதீங்க!

பல்வேறு காமெடி மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளின் கலெக்‌ஷன்களை இங்கே கண்டு ரசிக்கலாம்.

Samayam Tamil 10 Feb 2021, 2:07 pm
முல்லாவின் கதையை கேளுங்க...
Samayam Tamil Vadivelu


ஒரு போர் நடந்து முடிந்து போர் வீரர்கள் தங்கள் வீர தீரப் பிரதாபங்களைச் சொல்லி, ஜனங்களை வியக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது முல்லாவும் அங்கு சென்றார். தானும் தன் பங்கிற்கு தான் செய்த வீரச் செயல்களை சொல்ல ஆரம்பித்தார். நானும் ஒருமுறை ஒரு போரில் கலந்து கொண்டு ஒரு போர் வீரனின் இரண்டு கைகளையும் வெட்டிச் சாய்த்தேன் என்றார்.

அதற்கு மற்றொருவர், பொதுவாக யுத்தத்தில் தலையைத் தானே வெட்டுவது வழக்கம். தாங்கள் ஏன் தலையை விட்டுவிட்டு கைகளை வெட்டினீர்கள் என்றார். நான் தலையைத் தான் வெட்டியிருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன்பே யாரோ தலையை வெட்டியிருந்தார்களே? அதனால் தான் கைகளை வெட்டினேன் என்றார் முல்லா. எல்லாரும் ஆடிப் போய்விட்டனர்.

அடுத்த செய்தி