ஆப்நகரம்

வீரம் வர வேண்டுமா?

வடிவேலு காமெடியை மிஞ்சும் அளவுக்கு வேற ஒரு கேரக்டர் உள்ளார். அதுதான் நம்ம முண்ணா

Samayam Tamil 18 Dec 2020, 10:52 pm
முண்ணா ஒரு பாரில் அமர்ந்து குடித்து கொண்டிருந்தார். வீரமில்லாத அவரையும் குடி வீரமுள்ளவராக்கியிருந்தது. அப்போது ஒரு பயில்வான் பாருக்குள் நுழைந்தான். பார்ப்பதற்கே பயங்கரமான உருவம். கொலைக்கார களை அவன் முகத்தில். வேறு சமயமாக இருந்திருந்தால் முண்ணா அவனை பார்த்த உடனேயே நடு நடுங்கி போயிருப்பார். இப்போது குடித்திருப்பதால் சிறிதும் பயப்படவில்லை.
Samayam Tamil file pic


கொடூரன் முண்ணாவுக்கு அருகில் வந்து அமர்ந்தான். வேண்டுமென்றே முண்ணா காலில் ஓங்கி உதைத்தான். முன்னாவுக்கு அதிர்ச்சி கோபம்.

'' நீ ஏன் என்னை உதைக்கிறாய்? வேண்டுமென்றா? விளையாட்டுக்காகவா? '' என்று கேட்டார் முண்ணா.

முரடன் சொன்னான்! ' காரியமாகத்தான்'

'' அப்படியானால் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரியமாகத்தான் என்றால் சரிதான். ஏனென்றால் இந்த மாதிரி விளையாட்டெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது'' என்றார் முண்ணா...

அடுத்த செய்தி