ஆப்நகரம்

ஆன்லைனில்மூன்றில் ஒருவருக்கு போலி பொருட்கள்!

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவருக்கு போலியான பொருட்கள் அனுப்பப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 2 May 2018, 12:58 pm
ஆன்லைன் ஷாப்பிங் மூலம்பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவருக்கு போலியான பொருட்கள்அனுப்பப்படுவதாகசமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil salnflanslkdja


தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து வரும் நிலையில் எதையும்ஆன்லைன் மூலம் செய்ய முடிகிறது. மின்சார கட்டணம், செல்போனுக்கு ரீசார்ஜ். வங்கி கணக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது, போன்ற பல்வேறு விஷயங்களை நாம் இணையத்தின் விழியாக நம் தொடுதிரையில் செய்கிறோம்.
ஸ்மார்ட்போன்கள் முதல், துடைக்க பயன்படும் துடைப்பம் உள்ளிட்டவைகள் வரை தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கிடைக்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் விற்கப்படும்பொருட்களின் நம்பகத்தன்மை குறித்து வேலாசிட்டி எம்ஆர் என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் புனே நகரங்களில் உள்ள மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவர் போலி பொருட்களை பெறுவது உறுதிபடுத்தப்படுத்துள்ளது.

போலி பொருட்களை பெறும் வாடிக்கையாளர்கள், அதை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் தெரியப்படுத்துவதால், ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம் ஆண்டிற்கு 4 முதல் 5 சதவீதம் சரிவடைவதும் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்