ஆப்நகரம்

மாயப்பேனாவை கண்டுபிடித்த 9 வயது காஷ்மீர் மாணவன் - குவியும் பாராட்டுக்கள்

வடக்கு காஷ்மீர் குவாரெஸ் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் மாணவன் முஸாபர் அகமத் (வயது 9). இவர் எழுதும் போதே எத்தனை வார்த்தைகள் எழுதியுள்ளோம் என்று கணக்கிடும் அதிசய பேனாவை கண்டுபிடித்துள்ளார்.

Samayam Tamil 17 Apr 2018, 3:58 pm
வடக்கு காஷ்மீர் குவாரெஸ் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் மாணவன் முஸாபர் அகமத் (வயது 9). இவர் எழுதும் போதே எத்தனை வார்த்தைகள் எழுதியுள்ளோம் என்று கணக்கிடும் அதிசய பேனாவை கண்டுபிடித்துள்ளார்.
Samayam Tamil pen


பேனாவில் எப்படி சாத்தியம்;
இவர் உருவாக்கியுள்ள பேனாவின் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள கேசிங் எனும் சிறிய எல்.சி.டி மானிட்டரில் அவர் எழுதும் வார்த்தைகள் எத்தனை என்பதை எழுதும் போதே காட்டிவிடுகிறது.

மேலும் செல்போன்களில் நாம் குறுஞ்செய்திக்கு அடிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கையை கூட இதில் கணக்கிட முடியும் என கூறுகிறார்.

ஏன் கண்டுபிடித்தேன் :
முஸாபர் அகமத் தன் கடைசி பரிச்சையில் குறைவாக எழுதியதால் குறைவான மதிப்பெண் கிடைத்தது. அந்த வருத்தமே அவர் தான் எத்தனை வார்த்தைகள் எழுதுகிறேன் என கண்டுபிடிக்க தூண்டியது.

இவரின் கண்டுபிடிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழ்ந்துள்ளார். மேலும் ராஷ்ட்ரபதி பவன் விழாவில் இந்த பேனா காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனா விரைவில் வணீக ரீதியாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்