ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ஏர்செல் சேவை முடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏர்செல் சேவை முடங்கியதால் அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

Samayam Tamil 21 Feb 2018, 5:14 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏர்செல் சேவை முடங்கியதால் அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
Samayam Tamil aircel service stopped in tamilnadu and puducherry
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ஏர்செல் சேவை முடக்கம்!


தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவையை சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் ஏர்செல் சேவை முடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். ஏர்செல் சேவை முடங்கியதற்கான சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு இலவச இண்டர்நெட் மற்றும் கால் சேவைகளை வழங்கியது. இதன் காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களில் இருந்து ஜியோவுக்கு மாற தொடங்கினர். அதனால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.


இந்நிலையில் பிற நெட்வொர்க்களுடன் போட்டிப்போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏர்செல் சேவை முடங்கியுள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்