ஆப்நகரம்

ஏர்டெல் ரூ.199 ரிசார்ஜ் பிளானில் புதிய மாற்றம்!

ஏர்டெல் ரூ.199 ரிசார்ஜ் பிளானில் கூடுதலாக 2.8 ஜிபி டேட்டாவை கொடுக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 19 Dec 2018, 6:28 pm
ஏர்டெல் ரூ.199 ரிசார்ஜ் பிளானில் கூடுதலாக 2.8 ஜிபி டேட்டாவை கொடுக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil opi


ஏர்டெலின் ரூ.199 ரிசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, இலவச எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் மற்றும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பலாம். ஆனால் இதே ஆஃபரை ரிலையன்ஸ் ஜியோ ரூ.148-க்கு வழங்கியதால் போட்டியில் ஏர்டெல் நிறுவனம் பின்னுக்கு சென்றது.

எனவே மீண்டும் தங்களை தக்க வைத்துக்கொள்ள அதே பிளானில் புதிய ஆஃபரை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 199 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால் 2.8 ஜிபி டேட்டாவை கூடுதலாக வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன் மூலம் மீண்டும் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் களம் இறங்கியுள்ளது. மேலும் தினமும் 250 நிமிடத்தில் துவங்கி வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை இலவசமாக வாய்ஸ் கால்களையும் பேசிக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டாரங்கள் பயன் பெறும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்