ஆப்நகரம்

கேரளாவில் போன் கால், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் சேவைகள் இலவசம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தில் அனைத்து கால்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் இன்டர்நெட் வசதி இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2018, 9:17 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தில் அனைத்து கால்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் இன்டர்நெட் வசதி இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil Kerala_Floods_2_IT_1534421850223.


கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் மீட்ப்புணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு வெள்ளத்தில் தவிப்பவர்கள் மீட்புக்குழுவினரைத் தொடர்புகொள்ள உதவும் விதமாக கேரள மாநிலத்தில் போன் கால்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் இன்டர்நெட் வசதிகளை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவசமாக வழங்குவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளன என்று அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்