ஆப்நகரம்

Surf Excel MS Excel: சர்ப் எக்சலும் எம்.எஸ் எக்சலும் கூட்டுக் களவாணியா! ஆன்லைன் ஆப் பாயில்கள் அலும்பல்

இந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) நிறுவனத்துக்குச் சொந்தமான சர்ப் எக்சல் நிறுவனத்தின் புதிய விளம்பரம் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சர்ச்சையில் பரிதாபமாக சிக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். எக்சல்.

Huffington Post India 13 Mar 2019, 4:22 am
சர்ப் எக்சல் வெளியிட்டுள்ள புதிய விளம்பரத்தை எதிர்க்கும் நெட்டிசன்கள் எம்.எஸ். எக்சல் மொபைல் அப்ளிகேஷனை நோக்கி பாய்கின்றனர்!
Samayam Tamil feature-image-35


இந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) நிறுவனத்துக்குச் சொந்தமான சர்ப் எக்சல் நிறுவனத்தின் புதிய விளம்பரம் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சர்ச்சையில் பரிதாபமாக சிக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். எக்சல்.

ஹோலி சீசனை முன்னிட்டு சர்ப் எக்ஸல் புதிய விளம்பரத்தை வெளியிட்டது. அதில், ஹோலி பண்டிகை நாளில் ஒரு இந்து சிறுமி சைக்கிளில் சென்றுகொண்டிருப்பாள். அவள் மீது நண்பர்கள் அனைவரும் வண்ணங்களை வாரி இறைப்பார்கள். அப்போது ஒரு இஸ்லாமிய சிறுவன் வெள்ளை உடை அணிந்து தொழுகைக்குக் கிளம்புவான். அவனைப் பார்த்துவிட்டு அந்த சிறுமி சைக்கிளில் வருமாறு அழைப்பாள். அந்தச் சிறுவன் சைக்களில் சிறுமியுடன் செல்வதால், சிறுமியின் நண்பர்கள் வண்ணங்களைத் இறைப்பதை நிறுத்திக்கொள்வார்கள். சிறுமி அந்தச் சிறுவனை தொழுகை நடக்கும் பள்ளிவாசலில் கொண்டுவிடுவதுடன் விளம்பரம் முடியும்.


வண்ணங்கள் மக்களை இணைக்கிறது என்ற பெயரில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த விளம்பரத்தைத் தயாரித்துள்ளனர். ஆனால், இந்துத்துவர்கள் இது ஹோலியை கிண்டல் செய்வதுபோல உள்ளது என்றும் இந்து மதத்தைக் கேவலப்படுத்துகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிட்டனர். சர்ப் எக்சலை புறக்கணிப்போம் என முழங்கத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக சர்ப் எக்சலைக் குறிவைத்து தாக்கிய ஆசாமிகள், ஒரு படி மேலே போய் எம்.எஸ். எக்சல் மொலைல் அப்ளிகேஷனையும் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். எக்சல் என்ற வார்த்தையை தன் பெயரில் கொண்டிருப்பதால் வந்த வினை இது.

ஆப் ஸ்டோரில் எம்.எஸ். எக்சல் அப்ளிகேஷன் பற்றி மோசமான கருத்துகளைப் பதிவு செய்கின்றனர். சர்ப் எக்சல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்து மதத்தை அவமதிப்பதாக பலரும் பதிவிட்டுள்ளனர்.


சர்ப் எக்சலுக்கும் எம்.எஸ். எக்சலுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் அவை வேறு வேறு நிறுவனங்கள் என்றும் தெரியாத இந்த ஆசாமிகளால் எம்.எஸ். எக்சல் பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது.

இந்திய நெட்டிசன்கள் பொங்கி எழுந்து சம்பந்தம் இல்லாதவர்களையும் போட்டுத் தாக்குவது இது முதல் முறை இல்லை.


2017ஆம் ஆண்டு ஸ்னாப்சாட் (Snapchat) நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்தியா ஏழ்மையான நாடு என்பதால் தங்களது சேவையை அங்கு அளிக்கவில்லை எனக் கூறினார். இதனால், இந்தியாவை அவமதித்த ஸ்னாப்சாட் நிறுவனத்தை கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஸ்னாப்டீல் (Snapdeal) நிறுவனத்தை வறுத்தெடுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்