ஆப்நகரம்

நீங்க ஏர்டெல் பயனரா? உஷார்.. ஏனென்றால் 12 லட்சம் பேர் "தெறித்து" ஓடி விட்டனர்!

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட்டு தெறித்து ஓடிய 75 லட்சம் பயனர்கள்.. அம்பானி ஹேப்பி கூடவே பிஎஸ்என்எல் நிறுவனமும் ஹேப்பி.. ஏன், எப்படி இதோ முழு விவரங்கள்..

Samayam Tamil 15 Jul 2020, 10:14 am
பிப்ரவரி 2020-இல் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைப் பெற்ற பிறகு, பாரதி ஏர்டெல் மார்ச் மாதத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இழந்துள்ளது.
Samayam Tamil Jio vs Airtel


இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாதத்திற்கான தொலைத் தொடர்பு சந்தா தரவின் வழியாகத்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் 50,000 பேர்! சைலன்ட் ஆக அறிமுகமான ஏர்டெல் நிறுவனத்தின் ப்ளூஜீன்ஸ் ஆப்!

வெளியான டிராய் தரவின்படி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவங்களும் சேர்த்து கூட்டாக 75 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இழந்துள்ளன.வோடபோன் ஐடியா 63 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இழந்து செங்குத்தான சரிவைக் கண்டுள்ளது.

மறுகையில் உள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமோ அதே மாதத்தில் 46 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.

டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாத தரவுகளின் அடிப்படையில், ஜியோ நாட்டில் 33.47 சதவீத வயர்லெஸ் சந்தாதாரர் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து ஏர்டெல் 28.31 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த மார்ச் மாதத்தில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இருப்பினும், இது பிப்ரவரி மாத செயல்திறனை விட கணிசமாகக் குறைவு, பிப்ரவரில் பிஎஸ்என்எல் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைச் சேர்த்தது.

முன்னரே குறிப்பிட்டபடி வோடபோன் ஐடியா, கடந்த மார்ச் மாதத்தில் 63 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இழந்தது, இது பிப்ரவரியில் இழந்த 34 லட்சம் சந்தாதாரர்களை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த தரவுகளை புரட்டி பார்க்கும் போது, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களும் பிப்ரவரி மாத இறுதியில் 116 கோடியிலிருந்து மார்ச் மாத இறுதியில் 115 கோடியாகக் குறைந்துவிட்டதாக சமீபத்திய டிராய் வெளியீடு தெரிவித்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர சரிவு விகிதம் 0.24 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த Lock Down-னுக்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க; முக்கியமா Work From Home செய்றவங்க!

டிராய் வெளியிட்டுள்ள தரவின்படி மார்ச் மாதத்தில் இந்தியாவில் முதல் ஐந்து தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் பட்டியல் பின்வருமாறு:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 33.47 சதவீத சந்தை பங்கையும், பாரதி ஏர்டெல் 28.31 சதவீத சந்தைப் பங்கையும், வோடபோன் ஐடியா 27.57 சதவீத சந்தைப் பங்கையும், பிஎஸ்என்எல் 10.35 சதவீத சந்தைப் பங்கையும், எம்.டி.என்.எல் 0.29 சதவீத சந்தை பங்கையும் கொண்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில், ரிலையன்ஸ் ஜியோ மொத்தம் 38.7 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. மறுகையில் உள்ள பாரதி ஏர்டெல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 32.7 கோடியாக குறைந்துள்ளது, அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா ஆனது 31.9 கோடி, பிஎஸ்என்எல் ஆனது 11.9 கோடி, மற்றும் எம்டிஎன்எல் ஆனது 33.6 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்