ஆப்நகரம்

எதிர்ப்பு கிளம்புமென்று தெரிந்தும் BSNL எடுத்த முடிவு; அம்பானி ஹேப்பி! ஏன்?

வேறு வழியில்லாமல் கொடுத்த நன்மையை திரும்பிப்பெற்றுக்கொள்ளும் பிஎஸ்.என்.எல்! பின்னணி என்ன?

Samayam Tamil 5 Aug 2019, 6:18 pm
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்.என்.எல் நிறுவனமானது தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதும், அதன் நன்மைகளின் மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
Samayam Tamil BSNL Prepaid Combo Plans


சமீபத்தில் பி.எஸ்.என்.எல் அதன் சேவைகளுக்கான இலவச சந்தாவை அறிமுகப்படுத்தியது, OTT நன்மைகளைச் சேர்த்தது, மேலும் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மைகளையும் கொடுக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் கூட, ஒரு தைரியமான நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.

Jio GigaFiber Plans: எதிர்பார்த்ததை விட அதிக விலையில் வெளியாகும் 3 திட்டங்கள்!

இனிமேல் வரம்பற்ற அழைப்பென்பதே கிடையாது!

டெலிகாம் டாக் வலைதளத்தின்படி, பிஎஸ்என்எல் திட்டங்களின் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் ஆனது நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.1,699/- ஆகியவைகள் இனிமேல் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்காது.

இனிமேலே ஒரு நாளைக்கு எவ்வளவு இலவச அழைப்பு நிமிடங்கள்?

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பயனர்களுக்கு தினமும் 250 நிமிட இலவச வெளிச்செல்லும் நிமிடங்கள் மட்டுமே அணுக கிடைக்கும். அதாவது ஒரு பயனரால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்க்கான இலவச அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அர்த்தம்.

Facebook-ல் அதிக Likes-களை வாங்குவது எப்படி? நேர்மையான வழிகளும், குறுக்கு வழிகளும்!

வரம்பு முடிந்ததும் என்னவாகும்?

குறிப்பிடப்பட்டுள்ள 250 நிமிடங்கள் என்கிற தினசரி வரம்பு முடிந்ததும், பயனர்களுக்கு அடிப்படை கட்டணத்தின்படி அழைப்புகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது வினாடிக்கு 1 பைசா என்கிற விகிதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வரம்பானது நள்ளிரவு வரை இருக்கும், அதன் பிறகு தினசரி வரம்பு மீட்டமைக்கப்படும். இலவசமாக கிடைக்கும் 250 நிமிடங்களை நீங்கள் பயன்படுத்தப்படாவிட்டால், அது அடுத்த நாளுக்கு முன்னோக்கி செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு வழியின்றி அறிவிக்கப்பட்ட சலுகை!

அழைப்பு நன்மைகளுக்கான விகிதங்களை முற்றிலுமாக அகற்றி, வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்கிய முதல் டெலிகாம் ஆப்ரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ ஆகும். வேறு வழியில்லாமல், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களையும் அதை பின்பற்ற வேண்டியதாகிற்று. இப்போது பி.எஸ்.என்.எல் அதை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. மற்ற ஆபரேட்டர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஆகஸ்ட்டில் ரூ.10,000/-க்குள் வாங்க கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்!

அபிநந்தன் 151 திட்டத்தில் நிகழ்த்தப்பட்ட திருத்தம்!

பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது அபிநந்தன் 151 ப்ரீபெய்ட் திட்டத்தில் 50% கூடுதல் டேட்டாவை வழங்குவதாக அறிவித்தது. திருத்தத்திற்குப் பிறகு, ரூ.151/- திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு எதிரான ஒரு திடமாக உருமாறியுள்ளது. நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த இந்த திட்டம் தற்போது 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்