ஆப்நகரம்

BSNL அதிரடி ஆபர்: 15 நாட்களுக்கு FREE சிம் கார்டு; வாங்குவது எப்படி?

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய வரையறுக்கப்பட்ட கால சலுகையை அறிவித்துள்ளது.. இதன் வழியாக நீங்கள் இலவசமாக சிம் கார்டைப் பெறலாம்.. அதெப்படி.. இதோ முழு விவரங்கள்...

Samayam Tamil 16 Nov 2020, 12:47 pm
நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டங்களை மேம்படுத்தும் அதே நேரத்தில் , அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு புதிய சலுகையையும் கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதிய பயனர்கள் சிம் கார்டை இலவசமாகப் பெறுவார்கள்.
Samayam Tamil BSNL FREE SIM CARD OFFER


BSNL : ஒரே பிளான்.. 3300GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓஹோன்னு வாழ்க்கை!

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து தொலைதொடர்பு ஆபரேட்டர்களுமே புதிய சிம் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், இருப்பினும், அவர்கள் குறிப்பிட்ட தொகையை வெளியிடாமல், மாறாக சிம் கார்டுக்கான கட்டணம் மற்றும் முதல் ரீசார்ஜ் (எஃப்ஆர்சி) என மொத்தமாக வசூல் செய்கிறார்கள்.

Jio vs Airtel vs Vi : 84 நாட்கள் வேலிடிட்டி; எந்த ப்ரீபெயிட் பிளான் பெஸ்ட்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களை போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் அதன் சிம் கார்டுகளுக்கு சிறிய அளவிலான தொகையை வசூலிக்கிறது. சிம் கார்டுக்கு ஒவ்வொரு புதிய வாடிக்கையாளரிடமிருந்தும் பிஎஸ்என்எல் ரூ.20 வசூலிக்கிறது.

தற்போது விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இலவச சிம் கார்டை வழங்கி வருகிறது, ஆனால் இந்த சலுகைக்கு தகுதியுடையவராக இருப்பதற்கு பயனர் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு நிபந்தனை உள்ளது. மேலும், இந்த சலுகை வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

யாருக்கெல்லாம் இலவச சிம் கார்டு கிடைக்கும்?

மேலே குறிப்பிட்டபடி, ஒவ்வொரு புதிய வாடிக்கையாளரிடமிருந்தும் ஒரு சிம் கார்டுக்கு, பிஎஸ்என்எல் வழக்கமாக ரூ.20 வசூலிக்கிறது. ஆனால் நவம்பர் 14, 2020 முதல் நவம்பர் 28, 2020 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதில் ஒரு மாற்றம் நிகழும் மற்றும் பிஎஸ்என்எல் இயங்கும் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் இந்த சலுகை செல்லுபடியாகும்.

இந்த சலுகைக்கு தகுதி பெற, புதிய வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரீசார்ஜ் (எஃப்.ஆர்.சி) செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல் பரந்த அளவிலான எஃப்.ஆர்.சி திட்டங்களைக் கொண்டுள்ளது, அவைகளில் ஒன்றை நீங்கள் உங்களுக்கான இணைப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் பெறலாம்.

புதிய வாடிக்கையாளர்கள் சிம் கார்டுடன் இணைப்பைப் பெறுவதற்கு அருகிலுள்ள எந்த பிஎஸ்என்எல் சில்லறை கடைக்கும் செல்லலாம், மேலும் அவர்கள் அதே இடத்தில், நேரத்தில் எஃப்ஆர்சியையும் செய்து முடிக்கலாம்.

மற்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தை சுற்றிய செய்திகளை பொறுத்தவரை, எம்டிஎன்எல் உரிமம் ஜனவரி 2021 இல் காலாவதியாவதால் பிஎஸ்என்எல் விரைவில் பான்-இந்தியா ஆப்ரேட்டராக மாறும் என்று ஒரு சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

மேலும் பி.எஸ்.என்.எல் விரைவில் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களிலும் மொபைல் சேவைகளை வழங்கத் தொடங்கும் என்றும் சமீபத்திய பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கை கூறியுள்ளது.

தெரியாதவர்களுக்கு, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் 20 தொலைத் தொடர்பு வட்டங்களில் இயங்குகிறது, அதே நேரத்தில் எம்டிஎன்எல் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் செயல்படுகிறது.

எம்டிஎன்எல்-இன் உரிமம் 2021 இன் தொடக்கத்தில் காலாவதியாவதால், பிஎஸ்என்எல் மற்ற இரண்டு வட்டங்களையும் கையகப்படுத்துவதோடு பான்-இந்தியா ஆபரேட்டராகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்