ஆப்நகரம்

வெறும் ரூ.499 க்கு 3300GB டேட்டா; Jio-விற்கு மரணஅடி கொடுத்த BSNL!

பிஎஸ்என்எல் நிறுவனம்சைலன்ட் ஆன முறையில், ஆனால் வைலன்ட் ஆன நன்மைகளுடன் புதிய பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 28 Sep 2020, 8:52 am
இழந்த சந்தை பங்கைத் தக்க வைத்துக் கொள்ள, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிராட்பேண்ட் துறையில் "விளையாட்டை" முடுக்கிவிட்டுள்ளது.
Samayam Tamil bsnl vs jio new plans


ஆம்! பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ரூ.449 என்கிற ஆரம்ப விலைகளுடன் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை 2020 அக்டோபர் 1 முதல் வழங்கவுள்ளது.

Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது?

நீங்கள் நினைப்பது சரிதான். புதிய பாரத் ஃபைபர் திட்டங்கள் ஆனது திருத்தப்பட்ட ஜியோ ஃபைபர் திட்டங்களை இலக்காகக் கொண்டுள்ளன, ஜியோ ஃபைபர் திட்டங்களானது இப்போது ரூ.399 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 1 ரீசார்ஜ் செய்யகிடைக்கவுள்ள பிஎஸ்என்எல்-இன் நான்கு புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் - ரூ.449, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1,499 ஆகும். பிஎஸ்என்எல் இந்த திட்டங்களை விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறது.

Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய போஸ்ட்பெயிட் திட்டங்கள் அறிமுகம்!

அதாவது அவை அக்டோபர் 1 முதல் அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒருவேளை இந்த திட்டங்கள் மிகவும் பிரபலமடைந்தால், இவைகளின் கிடைக்கும் தன்மை நீட்டிக்கப்படும் அல்லது காணாமல் அடிக்கப்படும்.

கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பி.எஸ்.என்.எல் இந்த பாரத் ஃபைபர் திட்டங்களை நகரங்கள் / குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்க உள்ளது. அதாவது போட்டியாளர்களிடமிருந்து எங்கு சவால்கள் அதிகமாக இருக்குமோ அங்கே ஆட்டத்தை ஆரம்பிக்கிறது.

ரூ.499 - பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:

இதற்கு ‘ஃபைபர் பேசிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பயனருக்கு 30 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 3.3 டி.பி அல்லது 3300 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

குறிப்பிட்ட FUP வரம்பிற்குப் பிறகு, இணைய வேகம் 2 Mbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டம் அந்தமான் & நிக்கோபார் வட்டம் தவிர அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும்.

டேட்டா நன்மைகளை தவிர்த்து இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் பெறுவார்கள்.

ரூ.799 - பிஎஸ்என்எல் ஃபைபர் வேல்யூ பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:

இது 3300 ஜிபி அல்லது 3.3 டிபி அளவிலான டேட்டாவை 100 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது. குறிப்பிட்ட FUP க்கு பிறகு இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும்.

டேட்டாவை தவிர்த்து பயனர்கள் இலவச லேண்ட்லைன் அழைப்பு நன்மையையும் பெறுவார்கள். மேலே கண்ட பேஸிக் பிளான் மற்றும் இந்த வேல்யூ பிளான் உட்பட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எந்த திட்டங்களுமே நீங்க கால செல்லுபடிகளை வழங்கவில்லை. மாறாக ஒவ்வொரு திட்டத்திற்கும் குறைந்தபட்ச வாடகை காலம் ஒரு மாதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

ரூ.999 - பிஎஸ்என்எல் ஃபைபர் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:

திட்டத்தின் விலை கூறுவது போல், இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் பிரீமியம் திட்டமாகும். இது ஜியோ ரூ.999 உடன் நேரடியாக போட்டியிடுகிறது.

நன்மைகளை பொறுத்தவரை, இது 3300 ஜிபி அல்லது 3.3 டிபி அளவிலான டேட்டாவை 200 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது. குறிப்பிட்ட FUP க்கு பிறகு இணைய வேகம் 1 Mbps ஆக குறைக்கப்படும். இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்கும்.

ரூ.1499 - பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:

கடைசியாக உள்ள பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா பிராட்பேண்ட் திட்டமானது 300 Mbps என்கிற வேகத்தின் கீழ் வேறுபட்ட 4000GB அல்லது 4TB அளவிலான டேட்டாவை வழங்கும். குறிப்பிட்ட FUP அளவிற்கு பின்னர் இணைய வேகமானது 4 Mbps ஆக குறைக்கப்படும்.

டேட்டாவைத் தவிர இது வரம்பற்ற அழைப்பு நன்மையையும் கொண்டுள்ளது. மேலும் இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது.

ஒருவேளை வாடிக்கையாளர் இந்த திட்டத்தில் இருந்து விலகினால், அவர்களுக்கான OTT சந்தாவும் ரத்து செய்யப்படும். மாறாக அவர் நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் 300 மற்றும் சூப்பர்ஸ்டார் 500 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடம்பெயர விரும்பினால் "இது" நடக்காது. ரூ.999 திட்டத்திலும் இதே நடைமுறை தான்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிற அக்டோபர் 1, 2020 முதல் பல நகரங்களில் இந்த நான்கு திட்டங்களையும் வழங்கத் தொடங்கும். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அல்லது நகரத்தில் இந்நிறுவனத்திற்கு எந்த போட்டியும் இல்லை என்றால், இந்த திட்டங்கள் வழங்கப்படாது.

அறியாதவர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்தியாவில் முன்னணி பிராட்பேண்ட் சேவை வழங்குநராக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்