ஆப்நகரம்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: True Caller ஹேக் செய்யப்பட்டுள்ளது!

மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்யும் பிரபல 'ட்ரூ காலர்' ஆப்பில் பக் இருப்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு பற்றியும், பயனாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

Samayam Tamil 31 Jul 2019, 12:01 pm
ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு ‘ட்ரு காலர்’ ஆப் செயல்பட்டு வருகிறது. மொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
Samayam Tamil true caller bug


இந்த நிலையில், தற்போது ட்ரூ காலிரில் பாதுகாப்பு குறைபாடு ‘பக்’ இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது ட்ரூ காலரின் லேட்டஸ்ட் வெர்ஷன் 10.41.6 இல், பயனாளர்களின் அனுமதியே இல்லாமல், அவர்களுடைய பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் உருவாக்கப்படுகிறது.

மேலும், வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது குறித்து பயனாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. அதில், ‘வாழ்த்துக்கள் உங்களுக்கு புதிதாக யுபிஐ வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உங்களுடைய வங்கி விபரங்கள், பாஸ்வேர்டுகளை யாரிடமும் கூறாதீர்கள். இது நீங்கள் இல்லை என்றால் உடனே வங்கியை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்’ இவ்வாறு எஸ்எம்எஸ் வருகிறது.

இதையும் படிச்சு பாருங்க:
எச்சரிக்கை.. இந்த ஸ்மார்ட்போன்களை மட்டும் வாங்காதீர்கள்.

ஆளுக்கு ரூ.340/- கொடுத்து முகத்தை ஸ்கேன் செய்த Google
July 2019: பத்தாயிரம் ரூபாய்க்குள் எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்?
இதனால் ட்ரூ காலர் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பலர் தங்களது ட்ரூ காலரை அன்இன்ஸ்டால் செய்து வருகின்றனர். மேலும், ஐசிஐசிஐ வங்கி தரப்பில் இருந்து இது பற்றி எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ட்ரூ காலரில் இருக்கும் பக்கை பயன்படுத்தி தான் மர்ம நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ட்ரூ காலரிடம் சில பயனாளர்கள் அளித்த புகாரில், பக் விரைவில் சரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பக் இல்லாத புதிய வெர்ஷன் அப்டேட் செய்யப்படும் என்றும் பயனாளர்கள் அதை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமேசானில் சுதந்திர தின சிறப்பு விற்பனை!
வாட்ஸ்அப்பில் தமிழ் மொழியில் கொண்டு வருவது எப்படி?
சுந்தர் பிச்சையை பதவியை விட்டு தூக்குகிறதா Google

அடுத்த செய்தி

டிரெண்டிங்