ஆப்நகரம்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் மீது உத்தர பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு

உத்தர பிரதேச நீதிமன்றத்தில் மார்க் ஸுக்கர்பெர்க் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

Samayam Tamil 18 Oct 2018, 8:13 pm
இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் அரசு முத்திரைகள் மற்றும் கடித அச்சுகளை, ஃபேஸ்புக் வலைதளத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி, அதன் தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க் மீது உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil facebook-shareholders-support-removing-mark-zuckerberg-as-chairman.
ஃபேஸ்புக் மீது உத்தர பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு


உ.,பி-யை சேர்ந்த வழக்கறிஞர் ஓம்கார் என்பவர், அம்மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உரிய அனுமதியின்றி இந்திய அரசின் முத்திரைகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், அதன் முதன்மை செயல் இயக்குநர் ஷெரில் ஷான்பெர்க், தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் ஹாக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் இந்தியாவுக்கான பொறுப்பாளர் அஜித் மோகன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஓம்காரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன் மீதான விசாரணை அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறும் என உத்தர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனந்த் பிரகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்