ஆப்நகரம்

முதியவர் உயிரைப் பறித்த செல்போன்

ராஜஸ்தானில் ஒரு நபர் தூங்கும்போது தன் செல்போனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தூங்கி இருக்கிறார். இது திடீரென நள்ளிரவில் வெடித்தது. இதில் அவர் பலியானார்.

Samayam Tamil 4 Jan 2019, 12:57 pm
ராஜஸ்தானில் ஒரு நபர் தூங்கும்போது தன் செல்போனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தூங்கி இருக்கிறார். இது திடீரென நள்ளிரவில் வெடித்தது. இதில் அவர் பலியானார்.
Samayam Tamil cell phone


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாம்சங் கேலக்சி நோட் 7 போன் பாட்டரி வெடித்தது. சாலை அருகே வண்டியை நிறுத்திவிட்டு புதிதாக வாங்கிய ஐபோன் மூலம் பேசிக்கொண்டிருந்த நபரின் ஐபோன் வெடித்து அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இச்சம்பவங்கலுக்குப் பின்னர் செல்போன் பயனாளர்கள் உஷாராகத் தொடங்கினர்.

செல்போனை சட்டை, பேண்ட் பாக்கெட்களில் வைக்கவே பலர் பயந்தனர். சீன செல்போன் நிறுவனங்களான எம்ஐ, ஒப்போ, விவோ போன்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக கருதப்பட்ட நிலையில் போன் தயாரிப்பாளர்கள் பாட்டரி தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அனைத்து பிராண்டுகளிலுமே போன்கள் அரிதாக வெடிக்கும் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் சிட்டோர்கார் பகுதியைச் சேர்ந்த கிஷோர் சிங் என்ற 60 வயது நபர், செல்போனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தூங்கி இருக்கிறார். இது திடீரென நள்ளிரவு 2.30 மணிக்கு வெடித்தது. இதில் அவரது சட்டை தீப்பிடித்ததுக்கொண்டது. உடனே அவரது மனைவி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார். சிகிச்சைப் பலனின்றி கிஷோர் காலமானார். வெடித்தது ஜியோ போனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்