ஆப்நகரம்

புற்றுநோய் பயத்தில் பெண் - மேக்கப்பை கலைத்து கண்டுபிடித்த மருத்துவர்கள்

கண் பிரச்னை காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணுக்கு , அவர் போட்டிருந்த மேக்கப்பால் புற்றுநோய் என்ற ஸ்கேன் அறிக்கை வந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார்.

Samayam Tamil 31 Jul 2018, 1:26 pm
சென்னை : கண் பிரச்னை காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணுக்கு , அவர் போட்டிருந்த மேக்கப்பால் புற்றுநோய் என்ற ஸ்கேன் அறிக்கை வந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார்.
Samayam Tamil eye makeup


கண் பிரச்னை காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு எம்.ஆர்.ஐ (காந்த ஒத்திசைவு படமெடுத்தல் - magnetic resonance imaging) ஸ்கேன் செய்தனர்.

அதில் அந்த பெண்ணின் கருவிழியில் கட்டி இருப்பதாக அறிக்கை வந்தது. சாதாரண கண் இமை கட்டி என நினைத்த மருத்துவர்கள், கருவிழியில் கட்டி இருப்பது போன்று எப்படி காட்டுகிறது என குழம்பினர்.

மேக்கப்பால் பிரச்னை :
பின்னர் மீண்டும் அவரை ஸ்கேன் செய்து வர சொல்லியுள்ளனர். அதில் அவரின் கண்ணில் பிரச்னை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் என மருத்துவர்கள் கலந்து ஆலோசித்த நிலையில், அந்த பெண் மேக்கப்புடன் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண்ணை மேக்கப்பை கலைத்து, நன்றாக முகத்தை கழுவிவிட்டு ஸ்கேன் எடுக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் புற்றுநோய் கட்டியா என்ற பயத்தில் இருந்த பெண் ஸ்கேன் எடுக்கும் போது மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

அதன் முடிவில் அது சாதாரண கட்டி தான் என்றும், பெண்களின் மேக்கப் பொருட்களான கண் மை, ஐ லைனர், லிப்ஸ்டி, சரும கிரீம், நக சாயம் உள்ளிட்ட பொருட்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் படத்தை பாதிக்கும். அதனால் பாதிக்கப்பட்டவரின் ஸ்கேன் அறிக்கை தவறாக வர சாத்தியமுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்