ஆப்நகரம்

அரசியல், ஆபாசம், ஆபத்து; 9,800 சமூக வலைத்தள கணக்குகளை முடக்கிய அரசு!

பெய்ஜிங்: சைபர் செக்யூரிட்டி மூலம் ஆயிரக்கணக்கான சமூக வலைத்தள கணக்குகளை சீன அரசு முடக்கியுள்ளது.

Samayam Tamil 13 Nov 2018, 5:53 pm
சுதந்திரமான செய்தி அளித்துக் கொண்டிருந்த 9,800 சமூக வலைத்தள கணக்குகளை சீனாவின் சைபர் நிர்வாகம் முடக்கியுள்ளது. இவை மிகவும் ஆபாசமான, உணர்ச்சியை தூண்டக்கூடிய, அரசியல் ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளன.
Samayam Tamil Social media


கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சென்சார்ஷிப் விதிமுறைகளை சீன அரசு கடுமையாக்கி வருகிறது. இதுதொடர்பாக சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம்(CAC) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியல்ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய தகவல்கள், கட்சிகளின் வரலாற்றை தவறாக பரப்பும் தளங்கள், தனியொருவரின் புகழ்பாடுதல், தேசத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சமூக வலைத்தள கணக்குகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

இதுபோன்ற கணக்குகளை ஒழுங்குபடுத்த சமூக வலைத்தள ஜாம்பவான்களான விசாட், வெய்போ ஆகிய நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்