ஆப்நகரம்

பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி! ஏன்? எதற்காக? அடுத்தது என்ன தடை தானா?

சியோமி நிறுவனம் உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தால் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. ஏன்.. எதற்காக.. இதோ விவரங்கள்.

Samayam Tamil 18 Jan 2021, 12:41 pm
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி உட்பட மேலும் 8 நிறுவனங்கள் சீன இராணுவத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி, அமெரிக்கா அவைகளை அரசு பிளாக் லிஸ்ட்டில் (BlackList) சேர்த்துள்ளது. இதற்குப் பிறகு, அமெரிக்க முதலீட்டாளர்கள் தடுப்புப்பட்டியலில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil US Blacklisted Xiaomi


ராய்ட்டர்ஸின் (Reuters) அறிக்கை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள் இப்போது இந்த நிறுவனங்களின் ஷேர்ஸ் மற்றும் செக்யூரிட்டிஸ்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 11 ஆம் தேதி 2021 க்குள் அவற்றில் இருக்கும் ஹோல்டிங்ஸ்களை விலக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அமேசான் குடியரசு தின விற்பனை: வெறும் ரூ.48,900 க்கு ஐபோன் 12 சீரிஸ்!

டிரம்ப் நிர்வாகம் சியோமியை ஒரு “கம்யூனிஸ்ட் சீன இராணுவ நிறுவனம்” என்று நியமித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்கப் செக்யூரிட்டிஸ் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் “கம்யூனிஸ்ட் சீன இராணுவ நிறுவனங்களுக்கு” நிதியளிக்கும் முதலீடுகளை தடைசெய்ய கோரும் நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

சியோமியுடன், விமான உற்பத்தியாளர் கமர்ஷியல் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா (கோமாக்) போன்ற பிற பெரிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சியோமியில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் ஒன்றான குவால்காம் வென்ச்சர்ஸ் சியோமி உடனான வணிகத்தை நிறுத்தினால் இந்த தடை சியோமி நிறுவனத்தை பெரிய அளவில், கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

"தென்சீனக் கடலில் சீனாவின் பொறுப்பற்ற மற்றும் போர்க்குணமிக்க நடவடிக்கைகள் மற்றும் அதன் இராணுவமயமாக்கல் முயற்சிகள், உணர்திறன் வாய்ந்த அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான அதன் ஆக்கிரோஷமான உந்துதல் ஆகியவைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கும் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்" என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், கடந்த ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிக்னல் ஆப்பின் ஓனர் யார்? சிக்னலுக்குள் இருக்கும் வாட்ஸஅப்பின் "பழைய ஆள்" யார்?

சிஎன்பிசி அறிக்கையின்படி, சியோமியின் பங்குகள் "இந்த பிளாக்லிஸ்ட் நடவடிக்கைக்குப்" பிறகு 10.6 சதவீதம் குறைந்துவிட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலகின் நம்பர் 3 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக ஆப்பிளை மிஞ்சிய சியோமி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. சியோமி நிறுவனம் இந்த விஷயத்திற்காக அதன் சார்பில் இருந்து ஏதேனும் அறிக்கையை வெளியிட்டால், நாங்கள் உடனே அதை அப்டேட் செய்கிறோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்