ஆப்நகரம்

'செல்போன் இல்லாமல் ஒருநாள்’ - தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கிய போலந்து!

நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான போலந்து மக்கள் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 16 Jul 2018, 5:57 pm
வார்சா: நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான போலந்து மக்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil Cell Phone Usage


தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட தற்போதைய சூழலில், செல்போன்கள் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று நிலை உருவாகியுள்ளது. இதனால் செல்போன் பயன்பாடு அதிகரித்து, கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்நிலையில் ’செல்போன் இல்லாமல் ஒருநாள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை பல்வேறு நாட்டு மக்கள் தொடங்கியுள்ளனர்.

இதன்மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடன், நேரடியாக உறவாடும் சூழலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சாரம் மூலம் நிஜ உலகத்தில், உண்மையான உணர்வுகளுடன், சமூகத் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்துகின்றனர். எனவே இணையத்தில் தேடுதல், ஆன்லைனில் உரையாடல் ஆகியவற்றை தவிர்க்க இயலும் என்று ஷின்ஹூ செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் சமீபத்தில் இணைந்திருப்பது போலந்து. மத்திய புள்ளி விவர அலுவலகம் அளித்துள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு 92% போலந்து மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். இதில் 57% பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் ஆவர். இதுகுறித்து பேசிய பல்கலைக்கழக மாணவர் அக்னியஸ்கா, என்னுடைய செல்போன் இல்லாமல், என்னால் நிச்சயம் இருக்க முடியாது.

சில நிமிடங்களுக்கு ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கிறேன். சமூக வலைத்தளங்கள், செய்திகள் ஆகியவற்றை அறிந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். போலந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இள வயது நபர்கள் படிப்பு, உணவு, சினிமா உள்ளிட்ட நேரங்களில் கூட செல்போன்களை பயன்படுத்திக் கொண்டே இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்று செல்போனிற்கு அடிமையாகும் நிலைக்கு ’போனோஹோலிஸ்ம்’(Phonoholism) என்று பெயரிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள் நடத்தி வருகின்றனர்.

அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் நரம்பு தளர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், கவனக்குறைவு, கண்பார்வை குறைபாடு, முதுகெலும்பு பிரச்சனை உள்ளிட்டவை ஏற்படுகின்றன. மேலும் பயணத்தின் போது ஏராளமான விபத்துகளையும் உண்டாக்கி விடுகின்றன.

'Day without cell phone' campaign sees Polish people discourage phone usage.

அடுத்த செய்தி

டிரெண்டிங்