ஆப்நகரம்

உங்கள் மவுஸ் அசைவு கூட நாங்க பாத்துட்டு தான் இருக்கோம்: ஃபேஸ்புக்

பயனாளர்களின் மவுஸ் அசைவை கூட கண்கானித்துக் கொண்டிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Jun 2018, 9:02 pm
பயனாளர்களின் மவுஸ் அசைவை கூட கண்கானித்துக் கொண்டிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 4


அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், ஃபேஸ்புக்கில் இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடி, டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வந்தது. பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த செய்தியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

இந்நிலையல், பயனாளர்களுடைய கம்யூட்டரில் மவுஸ் அசைவை கூட கண்கானித்துக் கொண்டிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் செனட் கமிட்டி, பயனாளர்களின் தகவல்களை எடுப்பது குறித்த சுமார் 2,000 கேள்விகள் அடங்கிய 225 பக்க நோட்டீசை சமூகவலைதளங்களுக்கு அனுப்பி பதிலளிக்குமாறு கூறியது. இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் செயல்பாடுகளை கவனித்து வருவதை ஒப்புக் கொண்டது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது:

பயனாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுடைய மவுஸ் அசைவை கூட பார்க்க வேண்டியுள்ளது. பயனாளர்களுக்கும் இணையத்துக்கும் இடையே ஜாவா போட் எனும் வரைவு மூலம் தொடர்பு ஏற்படுகிறது. பயனாளர்களின் கம்யூட்டர் எந்த மாடல், என்ன சிறப்பம்சங்கள், அவர்களுடைய மொபைல், அது எதோடு எல்லாம் தொடர்பில் உள்ளது என்பது குறித்த எல்லா தகவல்களும் ஆட்டோமெட்டிக்காக எங்களுக்கு கிடைத்துவிடும். அதை வைத்து ஒருவருக்கு என்ன தேவை இருக்கிறது, அவருக்கு விருப்பமானது என்பதை அறிந்து விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு கொடுக்க முடியும். மற்றபடி தனி நபரின் பாதுகாப்பை சீர்கெடுக்கும் முயற்சி எதுவும் இல்லை.

இவ்வாறு ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்