ஆப்நகரம்

பயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்?

பயனர்களின் தகவல்களைத் திருடியதாக கண்டறியப்பட்ட சுமார் 200 அப்களை பேஸ்புக் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 15 May 2018, 5:10 pm
பயனர்களின் தகவல்களைத் திருடியதாக கண்டறியப்பட்ட சுமார் 200 அப்களை பேஸ்புக் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil பயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்?
பயனர்கள் தகவல்களைத் திருடியதால், 200 அப்களை நீக்கியது பேஸ்புக்?


கடந்த சில மாதங்களுக்கு முன், பேஸ்புக்கில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிக்ஸ் என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டது. இந்தத் தகவலையடுத்து, உலகம் முழுவதும்பேஸ்புக் குறித்த அச்சம் அனைவர் மத்தியிலும் உண்டானது. இதையடுத்து, அமெரிக்க அரசு இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொண்டது.

இதனிடையே, இந்தப் புகார்களை சரிசெய்யும் விதமாக, பயனர்களின் தகவல்களைத் திருடும் அப்ளிகேஷன்கள் பற்றி தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில், சுமார் 200 பேஸ்புக் அப்கள் பயனர்களின் தகவல்களைத் திருடுவதாகவும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த அப்கள் பேஸ்புக்கிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்