ஆப்நகரம்

இந்தியர்களுக்கு வேலை கொடுக்க யோசிக்கும் கூகுள்

ஒரு வேலைக்கு உரிய சரியான நபரை இந்தியாவில் தேர்வு செய்வது பெரிய சவால் என்று கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவர் ரோடி கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Jun 2018, 2:34 am
ஒரு வேலைக்கு உரிய சரியான நபரை இந்தியாவில் தேர்வு செய்வது பெரிய சவால் என்று கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவர் ரோடி கூறியுள்ளார்.
Samayam Tamil google-cloud-logo


கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைமை அதிகாரி ஓய்விண்ட் ரோடி. இவர் பேட்டி ஒன்றில் இந்தியாவில் ஒரு வேலைக்கு உரிய சரியான நபரை தேர்வு செய்வது பெரிய சவாலானது என்று கூறியுள்ளார். உலகம் முழுவதுமே இது முக்கியமான பிரச்னையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவில் புதிது புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. அவை மாறுப்பட்ட விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்கின்றன” என்றும் இதுவே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருவதற்கு என்னைத் தூண்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
இயந்திரத்திற்கு கற்பித்தல் மற்றும் பகிரமைப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திறன் மிக்கவர்களுக்கான தேவை உலக அளவில் அதிகமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்