ஆப்நகரம்

Flipkart Big Billion Days மொபைல் சலுகைகள் அறிவிப்பு தேதிகள்! செப்டம்பர் 28 முதல் துவக்கம்!

பிளிப்கார்ட் தளத்தில் விரைவில் Big Billion Days Sale தொடங்க உள்ளது. இதனையொட்டி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு மொபைலுக்கும் தனித்தனியாகவும் வெவ்வேறு தேதிகளிலும் சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 25 Sep 2023, 5:15 pm
இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சலுகை விற்பனை திருவிழாவான Big Billion Days Sale விற்பனையை இந்தாண்டும் அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களில் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வரை பல்வேறு பொருட்களுக்கும் 80 சதவீதத்திற்கும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு சலுகை என்று இன்னும் அறிவிக்கவில்லை.
Samayam Tamil Flipkart Big Billion Days Sale


முன்னணி ப்ராண்டுகளுக்கும் சலுகை
குறிப்பாக இந்த சலுகை விற்பனையில் ஆப்பிள், சாம்சங், ரெட்மி, ரியல்மி, விவோ, ஒப்போ என முன்னணி மொபைல் நிறுவனங்களின் பிராண்டட் மொபைல்கள் அதிகம் சலுகை விலையில் விற்பனையாகும், பிளிப்கார்ட்டின் தனி சலுகை மட்டுமில்லாது, வங்கிகளின் சலுகைகளும் வழங்கப்படும்.

மொபைல் சலுகைகள்
2023 Big Billion Days விற்பனையில் 6 புதிய மொபைல்களையும் சலுகையில் அறிமுகப்படுத்த உள்ளது பிளிப்கார்ட். அந்த வரிசையில் Moto edge 40 Neo , Vivo T2 Pro , Samsung Galaxy S21 FE, realme C53, Vivo V29 அடங்கும். மேலும், Moto G54 5G, Moto G84 5G, realme C51, Samsung Galaxy F34 5G, Galaxy Z Fold 5, Z Flip 5, infinix Zero 30 5G உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிராண்டட் மொபைல்களுக்கு அதிரடி சலுகைகளும் உண்டு. அந்த வரிசையில் எந்த நிறுவனத்தின் மொபைல்களுக்கு அறிவிப்பு எந்த தேதியில் வரும் என்பதையும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் மொபைல் சலுகை
வ.எண் தேதி நிறுவனம்
1செப்டம்பர் 28 மோட்டோ (Moto)
2செப்டம்பர் 29விவோ (Vivo)
3செப்டம்பர் 30இன்பினிக்ஸ் (infinix)
4அக்டோபர் 2 நத்திங் (Nothing)
5அக்டோபர் 3சாம்சங் (Samsung)
6அக்டோபர் 4போக்கோ (Poco)
7அக்டோபர் 5கூகுள் பிக்ஸல் (Google Pixel)
8அக்டோபர் 6ரியல்மி (Realme)
9அக்டோபர் 7ஜியோமி (Xiaomi)
10அக்டோபர் 8ஓப்போ (Oppo)
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்