ஆப்நகரம்

20 கோடி ரூபாய் பரிசுப் பெற்ற சிறுவன்! எதற்கு தெரியுமா?

வீடியோ கேம் விளையாட்டில் 20 கோடி ரூபாய் பரிசு வாங்கியது எங்கயாவது கேட்டதுண்டா? அமெரிக்காவில் தற்போது ஒரு சிறுவன் இந்த பரிசுத் தொகையைப் பெற்றுள்ளான்.

Samayam Tamil 30 Jul 2019, 7:17 pm
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் வீடியோ கேம் விளையாடி 20 கோடி ரூபாய் பெற்றுள்ளான். அப்படி என்ன வீடியோ கேம், என்ன விளையாட்டு என்பதை இங்கு காணலாம்.
Samayam Tamil fortnite video game winner


அண்மையில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் ‘ஃபார்ச்சூன்’ என்ற வீடியோ கேம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இது முழுக்க முழுக்க ஆன்லைன் விளையாட்டாகும். கம்ப்யூட்டரில் அட்வெஞ்சர் கிராபிக்ஸ் மூலம் போட்டியாளர்கள் உள்நுழைய வேண்டும். வழக்கம் போல, கிராபிக்ஸில் கட்டைக் கம்பு, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வரும். அதை எடுத்துக் கொண்டு மற்றவர்களை போட்டு தள்ளிவிட்டு யார் இறுதி வரை வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார்.

இதையும் படிங்க:
சுந்தர் பிச்சையை பதவியை விட்டு தூக்குகிறதா Google
ஒரு போட்டோவுக்காக 5 ஆயிரம் மைல் கடந்து சென்ற பத்திரிகையாளர்

இந்த போட்டியில் கைல் கியர்்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் முதல் இடத்தைப் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளான். இவனுக்கு இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரிசு கிடைத்ததும் அந்த சிறுவன் திக்குமுக்காடி போயுள்ளான். இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இரண்டாம் இடத்தை ஜாடென் அஷ்மான் என்ற 15 வயது சிறுவன் பிடித்துள்ளான். அஷ்மானுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் இருந்தாலும், இது குழந்தைகளின் மனதை பெருமளவு பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்