ஆப்நகரம்

செல்பி மரணத்தில் முதலிடம் பிடித்த இந்தியா; பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

செல்பி மரணத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

TNN 6 Oct 2017, 11:17 am
டெல்லி: செல்பி மரணத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Samayam Tamil india is in the first place of selfies death
செல்பி மரணத்தில் முதலிடம் பிடித்த இந்தியா; பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?


தொழில்நுட்பம் கைக்குள் அடங்கிவிட்ட நிலையில், செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நன்மைகளை விட, தீமைகளே மிகுதியாக காணப்படுகிறது.

அவற்றில் முக்கியமானது செல்பி மோகம். பாதுகாப்பான சூழலில் எடுக்கப்படும் செல்பிக்களுக்கு என்றுமே தடையில்லை.

அதேசமயம் மிகவும் ஆபத்தான இடங்களில், தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையில் எடுக்கப்படும் செல்பிகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன.

உலக அளவில் எடுக்கப்பட்ட சர்வேயில், செல்பி மரணத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி,

சர்வதேச அளவில் செல்பி மரணங்கள்:

* இந்தியா - 76

* பாகிஸ்தான் - 9

* அமெரிக்கா - 8

* ரஷ்யா - 6

* பிலிப்பைன்ஸ் - 4

* சீனா - 4

* ஸ்பெயின் - 3

* இந்தோனேஷியா, போர்ச்சுகல், பெரு, துருக்கி - 2

2014 - 2016 காலக்கட்டத்தில் ஏற்பட்ட செல்பி மரணங்கள் 127 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதில் 75.5% பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது செல்பி மோகத்தில் சிக்கித் தவிக்காமல், உயிரைக் காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட வலியுறுத்துவோம்.

India is in the first place of selfie's death.

அடுத்த செய்தி

டிரெண்டிங்