ஆப்நகரம்

COVID-19 Update: இ-காமர்ஸ் விற்பனை மீண்டும் தடை; யூ-டர்ன் அடித்தது இந்திய அரசு!

இந்திய அரசாங்கம் குழப்பத்தில் உள்ளதா அல்லது மிகவும் விழிப்புடன் உள்ளதா?

Samayam Tamil 20 Apr 2020, 9:43 am
இ-காமர்ஸ் தளங்கள் வழியாக பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்ய அனுமதித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, அத்தியாவசியமற்ற பொருட்களை இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு இந்திய அரசாங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தடை விதித்தது.
Samayam Tamil Amazon and Flipkart Service Stops again


மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விலக்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள், ஈ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் - சில பிரத்யேக விதிமுறைகளின் கீழ் - தேவையான அனுமதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் 20 முதல் இ-காமர்ஸ் இயங்குதளங்கள் அத்தகைய பொருட்களை விற்க அனுமதிக்கப்படுவதாக ஏப்ரல் 15 உத்தரவு தெரிவித்திருந்தது. தற்போது திடீரென்று அதை மாற்றியமைப்பதற்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை.

இ-காமர்ஸ் தளங்களில் உணவு, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்க அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் முந்தைய உத்தரவில், "அத்தியாவசிய பொருட்களின் வழங்கல் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு நாள் கழித்து, மொபைல் போன்கள், டிவிக்கள், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினி கணினிகள், ரெடிமேட் ஆடைகள், பள்ளி மாணவர்களுக்கான ஸ்டேஷனரி பொருட்கள் போன்ற பொருட்கள் ஏப்ரல் 20 முதல் இ-காமர்ஸ் தளங்களின் வழியாக கிடைக்கும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, ஒரு சில ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறின. அதனை தொடர்ந்து இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளருடன் அனைத்து லாரிகள் மற்றும் சரக்கு வண்டிகளை இயக்க அரசாங்கம் அனுமதித்தது தற்போது இ-காமர்ஸ் வழியிலான அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனை மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்