இந்திய அரசு கல்விக்கும் தொழில்நுட்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே சீனாவை முந்தும் கனவு பலிக்கும் என்று நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற தமிழர் தஞ்சையில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். 65 வயதான இவர் தற்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் ஆய்வு மையமான ‘தி ராயல் சொசைட்டி’யில் பணிபுரிகிறார்.
அண்மையில் செய்தி ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி கொடுத்த அவர், இந்திய அரசு யார் என்ன இறைச்சி சாப்பிடுகிறார் என்பது பற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பதை விட்டு, கல்விக்கும் தொழில்நுட்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இதைச் செய்பவர்கள் நாட்டுப்பற்றுடன் நல்லது செய்வதாகச் செய்துகொண்டு மத விரோதப் போக்கை தொடர்கிறார்கள். இதனால் நாட்டில் மோசமான விளைவுகளே அரங்கேறுகின்றன.” என்று கூறிய அவர், “நவீனமயமாக்கல் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால், இந்தியாவின் போட்டியாக கருதப்படும் சீனா ரோபோக்கள் தயாரிக்கவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கவும் பெருமளவு முதலீடுகளைச் செய்கிறார்கள். இது எதிர்காலத்தில் அவர்களுக்கும் பெருதவியாக அமையும். இதைப் பற்றி இந்தியா யோசிக்கவில்லை என்றால் போகிற போக்கில் இந்தியா பின்தங்கிய நிலைக்குத் வீழ்ச்சி அடையும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற தமிழர் தஞ்சையில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். 65 வயதான இவர் தற்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் ஆய்வு மையமான ‘தி ராயல் சொசைட்டி’யில் பணிபுரிகிறார்.
அண்மையில் செய்தி ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி கொடுத்த அவர், இந்திய அரசு யார் என்ன இறைச்சி சாப்பிடுகிறார் என்பது பற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பதை விட்டு, கல்விக்கும் தொழில்நுட்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இதைச் செய்பவர்கள் நாட்டுப்பற்றுடன் நல்லது செய்வதாகச் செய்துகொண்டு மத விரோதப் போக்கை தொடர்கிறார்கள். இதனால் நாட்டில் மோசமான விளைவுகளே அரங்கேறுகின்றன.” என்று கூறிய அவர், “நவீனமயமாக்கல் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால், இந்தியாவின் போட்டியாக கருதப்படும் சீனா ரோபோக்கள் தயாரிக்கவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கவும் பெருமளவு முதலீடுகளைச் செய்கிறார்கள். இது எதிர்காலத்தில் அவர்களுக்கும் பெருதவியாக அமையும். இதைப் பற்றி இந்தியா யோசிக்கவில்லை என்றால் போகிற போக்கில் இந்தியா பின்தங்கிய நிலைக்குத் வீழ்ச்சி அடையும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.