ஆப்நகரம்

கேரளாவுக்கு வெறும் 10 ஆயிரம் கொடுத்த கோடீஸ்வரர்! குவியும் கண்டனம்

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் கேரள நிவாரண நிதியாக ரூ.10,000 மட்டுமே கொடுத்ததற்காக நெட்டிசன்கள் அவரை வசைபாடி வருகின்றனர்.

Samayam Tamil 18 Aug 2018, 5:55 pm
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் கேரள நிவாரண நிதியாக ரூ.10,000 மட்டுமே கொடுத்ததற்காக நெட்டிசன்கள் அவரை வசைபாடி வருகின்றனர்.
Samayam Tamil inshorts_image_1534591352601_932


பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் விஜய் சேகர் சர்மா. இந்தியாவின் இளம் கோடீஸ்வரராகக் கருதப்படும் இவரிடம் 1.7 பில்லியன் டாலர் சொத்து உள்ளது.

இவர் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு தன் பங்கிற்கு ரூ.10,000 நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளேன் என ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், “நீங்களும் உங்கள் உதவியை பேடிஎம் மூலம் செலுத்துங்கள்” என்றும் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் கோடீஸ்வரராக இருந்துகொண்டு வெறும் 10,000 ரூபாய்தான் கொடுக்க மனம் வந்ததா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பேடிஎம் மொபைல் அப்ளிகேஷனில் கேரள வெள்ள நிவாரணத்திற்காக நிதி உதவி வழங்கும் வசதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளதால் அதற்கு விளம்பரம் போல இப்படி உதவி செய்வது போல நாடகமாடுகிறார் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்