ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் ஜியோ முடங்கியதற்கு இதுதான் காரணமா?

ஜியோ தொலைத்தொடர்பு சேவையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனைக்கு, அப்டேட்களே காரணம் என ஜியோ சேவை மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Jun 2018, 10:59 am
ஜியோ தொலைத்தொடர்பு சேவையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனைக்கு, அப்டேட்களே காரணம் என ஜியோ சேவை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகம் முழுவதும் ஜியோ முடங்கியதற்கு இதுதான் காரணமா?
தமிழகம் முழுவதும் ஜியோ முடங்கியதற்கு இதுதான் காரணமா?


தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது. இதற்கு, அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சலுகைகளே காரணம் எனலாம். பல்வேறு இலவசச் சலுகைகள் காரணமாக, குறைந்த காலக்கட்டத்திலேயே ஜியோ, பல கோடிக் கணக்கில் வாடிக்கையாயாளர்களைப் பெற்றது.

இருப்பினும், பல இடங்களில் ஜியோவின் சேவை மிகவும் மோசமாக உள்ளதாகவும், சிக்னல் சரிவர கிடைப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், நேற்று மாலை தமிழகம் முழுவதும் ஜியோ சேவை முற்றிலுமாக முடங்கியது. பல இடங்களில் வாய்ஸ் கால் செயல்படவில்லை. சுமார் மூன்று மணிநேரம் வரை நீடித்த இந்த தடங்கலால், பொதுமக்கள் பலரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், சேவை முடக்கப்பட்டது குறித்து ஜியோ வாடிக்கையாளர் சேவை மையம் விளக்கமளித்துள்ளது. அதில், “தகவல் தொழில்நுட்ப சீரமைப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாலும், புதிய நெட்வொர்க் அப்டேட்களை மேற்கொண்டதாலும் இந்தச் சிக்கல் ஏற்பட்டது,” என தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற சிக்கல் எதிர்காலத்தில் ஏற்படுமா என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் சேவை முடக்கம் ஏற்பட்டது உண்மையே, இருப்பினும் இது போன்ற சிக்கல் இனி ஏற்பட வாய்ப்பில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்