ஆப்நகரம்

இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் ஆரம்பம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் தொடங்க உள்ளது.

TNN 15 Oct 2017, 9:01 pm
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் தொடங்க உள்ளது.
Samayam Tamil jio phone eagerly waiting for bookings to resume next date out
இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் ஆரம்பம்!


ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சிம் கார்டு மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டது. பின்னர், ஜியோ போன் என்ற பெயரில் இலவச 4G மொபைல் அறிமுகம் செய்து அசத்தியது. ரூ.1500 வைப்புத்தொகையாக கொடுத்து ஜியோ போன் வாங்கலாம். மூன்று ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு போனை திருப்பிக்கொடுத்துவிட்டு செலுத்திய வைப்புத்தொகையை முழுமையாகத் திரும்பப் பெறலாம்.

ஜியோவின் இந்த திட்டமும் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவது கட்ட ஜியோ போன் புக்கிங் தொடங்க உள்ளது.

ஜியோ போனை 6 மில்லியன் பேர் புக் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீபாவளிக்குள் மொபைல் கிடைத்துவிடும். தீபாவளிக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது கட்டமாக ஜியோ போன் விற்பனைக்கான புக்கிங் தொடங்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்