ஆப்நகரம்

ஜியோ கட்டணங்கள் எவ்வளவு உயரும்? எப்போது முதல் அமலுக்கு வரும்? வெளியானது ஜியோ செய்திக்குறிப்பு!

வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் ஆனது தங்களது புதிய கட்டணங்கள் ஆனது நாளை முதல் (டிசம்பர் 3, 2019) அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில், ஜியோ நிறுவனத்திடம் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது! அதென்ன கூறுகிறது? வாருங்கள் பார்ப்போம்!

Samayam Tamil 2 Dec 2019, 11:32 am
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான 2016 செப்டம்பர் 5 என்கிற தேதியானது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு 2019 டிசம்பர் 3 மற்றும் 6 ஆம் தேதிகளும் மிகவும் முக்கியமானதாகும். முதல் தேதியானது விலைக்குறைப்பிற்காகவும், இரண்டாவது தேதிகளானது விலை ஏற்றத்திற்காகவும் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்.
Samayam Tamil Jio New Prices from Dec 6, 2019


ஆம்! இந்திய தொலைத் தொடர்புத் துறையானது தற்போது மற்றொரு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் தங்களது கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டுள்ளது.

முதலில் வோடாபோன் ஐடியா, பின்னர் ஏர்டெல், கடைசியாக ஜியோ!

எதிர்பார்த்தபடியே (மற்றும் அறிவித்தபடியே) வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் விலை உயர்வை முதலில் அறிவித்தது. பின்னர் பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. மறுகையில் உள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் செய்திக்குறிப்பு ஒன்றை மட்டுமே வெளியிட்டுள்ளது, அதில் வரவிருக்கும் நாட்களில் தொடரப் போகும் கட்டண உயர்வு குறித்து சில விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

எக்காரணத்தை கொண்டும் "இதையெல்லாம்" கூகுளில் தேட வேண்டாம்; அப்புறம் நாங்க பொறுப்பில்ல!

நினைவூட்டும் வண்ணம், வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றின் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோவும் அதன் சந்தாதாரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் அதன் திட்டங்களின் கட்டணத்தை அதிகரிக்கும் என்று அறிவித்தது.

வெளியான செய்திக்குறிப்பில், ரிலையன்ஸ் ஜியோ அதன் சந்தாதாரர்களுக்கு எந்த அளவிலான கட்டண உயர்வை அறிவிக்கும் என்றும், குறிப்பிட்ட விலை அதிகரிப்புக்குப் பிறகு அவர்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதையும் விளக்கியுள்ளது. இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய திட்டங்கள் குறித்து எந்த விவரங்களையும் அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எந்த அளவிலான விலை உயர்வு அறிவிக்கப்படும்?

இங்கே கவனிக்க வேண்டிய முதல் விடயம் என்னவென்றால், ரிலையன்ஸ் ஜியோ முற்றிலும் புதிய ஆல்-இன்-ஒன் திட்டங்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதாவது பழைய திட்டங்களுடன் ஒப்பிடும் போது, புதிய திட்டங்களின் விலைகளானது 40% என்கிற அளவிலான கட்டண உயர்வை பெரும்.

இந்த 19 ஆப்களில் எதாவது ஒன்றை வைத்து இருக்கிறீர்களா? "ஆம்" என்றால் சிக்கலில் உள்ளீர்கள்! ஏன்?

நினைவூட்டும் வண்ணம், இனிமேல் இலவ அழைப்புகள் கிடையாது, நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த பின்னர், ஜியோ அதன் ஆல் இன் ஒன் திட்டங்களை அறிமுகம் செய்தது. இது டேட்டா, எஸ்எம்எஸ், ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் உடனாக வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க் உடனான ஐ.யூ.சி நிமிடங்கள் போன்ற அனைத்தையும் தொகுக்கின்றன.

எப்போது முதல் ஜியோ கட்டண உயர்வு அமலுக்கு வரும்?

இந்த கட்டண உயர்வு ஆனது வருகிற டிசம்பர் 6 முதல் அமலுக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது. வோடாபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் விலையை உயர்த்தியுள்ளனர் என்பதும், டிசம்பர் 3 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் இந்த புதிய திட்டங்களைத்தான் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி எல்லாம் தெரியாமல் புதிய Aadhaar App-ஐ டவுன்லோட் செய்ய வேண்டாம்!

40% என்கிற விலை உயர்வை அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய ஆல் இன் ஒன் திட்டங்களின் நன்மைகளைப் பற்றியும் பேசியுள்ளது. அதாவது 300% அதிக அளவிலான நன்மைகள் தொகுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனவே, ரிலையன்ஸ் ஜியோ விலையை உயர்த்தினாலும், மறுகையில் ஆல் இன் ஒன் திட்டங்களின் சில நன்மைகளை அதிகரிக்கும் என்று நாம் நம்பலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரும் வரையிலாக நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்