ஆப்நகரம்

அறிவியல் உலகில் மைல்கல்: ஒளியை ஒலியாக மாற்றி சாதனை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.

TNN 19 Sep 2017, 11:16 am
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
Samayam Tamil light has been stored as sound for the first time
அறிவியல் உலகில் மைல்கல்: ஒளியை ஒலியாக மாற்றி சாதனை


ஆஸ்திரேலியா நாட்டிற் சிட்னி பல்கலைக்கழகத்தில் ஒளித் தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டியறியும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில், நேற்று தங்கள் ஆய்வில் வெற்றிகரமான முடிவை எட்டியுள்ளனர்.

ஒளியை ஒலி வடிவாகவும் ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர் (Photonic computer) எனப்படும் என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்