ஆப்நகரம்

அமேசான் மோசடி: மொபைல் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு டெலிவரி!

அந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி அளிப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியிருக்கிறது.

Samayam Tamil 31 Oct 2018, 4:08 pm
அமேசான் மூலம் பணம் செலுத்தி மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 66440835


உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் மூலம் மொபைல் போன் ஒன்றை கடந்த 23ஆம் தேதி ஆர்டர் செய்தார். 4 நாட்கள் கழித்து அவருக்கு அமேசானிலிருந்து வந்த பார்சலில் மொபைலுக்குப் பதில் சோப்புக்கட்டி ஒன்று இருந்திருக்கிறது.

உடனே அவர் அருகில் உள்ள பிஸ்ரா காவல் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை டெலிவரி செய்த அனில் ஆகியோர் மீது புகார் அளித்துவிட்டார்.

போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி அளிப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்