ஆப்நகரம்

தகவல் திருடப்பட்டது உண்மைதான்; பகிரங்க மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக் மார்க்

ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்று கூறி அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 11:07 am
ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்று கூறி அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
Samayam Tamil mark zuckerberg


அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், ஃபேஸ்புக்கில் இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடி, டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வந்தது.பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த செய்தியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸக்கர் பெர்க், சிஎன்என் என்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்றும் மக்களின் தகவல்களைப் பாதுகாத்துதான் வருகிறோம், அது எங்களின் அடிப்படை கடமை என்று கூறிய அவர், தகவல்களைப் பாதுகாக்க தவறிவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் சரியான பாடம் கற்றுக்கொண்டோம் என்றும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். கேம்பிரிட் அனலிட்டிகா நிறுவனம் போன்று, மற்ற நிறுவனங்களின் ஆப்-கள் அனைத்தையும் தணிக்கை செய்யப்பட்டு, பாதுகாப்பை உறுதிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்