ஆப்நகரம்

அமேசானை ஏமாற்றி லட்சாதிபதியான மோசடி மன்னன்

அமேசானில் ஆர்டர் செய்த பொருள் கிடைக்கவில்லை என்று பொய்சொல்லி ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

TNN 12 Oct 2017, 2:54 pm
அமேசானில் ஆர்டர் செய்த பொருள் கிடைக்கவில்லை என்று பொய்சொல்லி ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil master scamster at 21 how a delhi man robbed amazon of rs 50 lakh
அமேசானை ஏமாற்றி லட்சாதிபதியான மோசடி மன்னன்


டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சிவம் சோப்ரா. பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருந்திருந்த இவர், போலி சிம் கார்டுகளை விற்கும் சுனில் ஜெயின் என்பவரிடம் போலியான பெயர், முகவரி கொடுத்து, சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். இந்த போலி சிம் மூலம் அமேசான் இணையதளத்தில் விலை உயர்ந்த மொபைல் போன்களை ஆர்டர் செய்துள்ளார்.

அமேசானிலிருந்து டெலிவரி செய்ய வருபவர்கள் போலியான முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் சோப்ராவுக்கு போன் செய்யும்போது அருகில் உள்ள இடத்திற்குச் சென்று மொபைலை வாங்கிக்கொள்வார். பின்னர், பார்சலில் இருந்து மொபைலை மட்டும் எடுத்துக்கொண்டு ஆர்டர் செய்த மொபைல் கிடைக்கவே இல்லை என்று என்று டூப் விடுவார். இதை நம்பி அமேசானும் பணத்தைத் திரும்பக்கொடுக்கும்.



இப்படியே கடந்த ஓராண்டில் 144 போலி சிம் கார்டுகள் மூலம் 166 மொபைல்களை ஆர்டர் செய்து, மொபைல் கிடைக்கவே இல்லை என்று பொய் சொல்லி 50 லட்சம் வரை தேற்றிவிட்டார்!

இத்துடன் நில்லாமல் மோசடி செய்து வாங்கிய மொபைல்களை இணையம் மூலமோ கடைகளிலோ விற்று பணம் பெற்றுள்ளார். அமேசானுக்கு திடீரென சந்தேகம் வந்து போலீசில் புகார் கொடுக்கவும் சிவம் சிக்கினார்.

போலீசார் சிவம் மற்றும் அவருக்கு போலி சிம் விற்ற சுனில் ஜெயின் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் வசம் இருந்த 19 மொபைல் போன்கள், 12 லட்சம் ரூபாய் பணம், 40 வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்