ஆப்நகரம்

விமானத்தில் தீ மூட்டிய சாம்சங் மொபைல்!

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவரின் பையில் இருந்த சாம்சங் மொபைலில் தீ பிடித்தது.

TNN 21 Oct 2017, 8:32 pm
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவரின் பையில் இருந்த சாம்சங் மொபைலில் தீ பிடித்தது.
Samayam Tamil mid air scare cell phone catches fire on delhi indore jet airways flight
விமானத்தில் தீ மூட்டிய சாம்சங் மொபைல்!


டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் 9W 791 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 120 பயணிகள் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் அர்பிதா தல் என்ற பெண்ணின் பையில் இருந்து புகை கிளம்பியது.

இதனை அறிந்த அவர் உடனே விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பற்றி எரிந்த மொபைலைக் கைப்பற்றி பெரும் விபத்திலிருத்து பயணிகளை காத்தனர். இருப்பினும், விமானத்தில் இருந்த தீயணைப்பு கருவிகள் வேலை செய்யவில்லை என்று தீப்பிடித்த மொபைலின் உரிமையாளரான அர்பிதா தல் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த விமான பணியாளர் ஒருவர், பயணியில் பையில் இருந்த மூன்று மொபைல்களில் சாம்சங் J7 (Samsung J7) மொபைல் மட்டும் தீப்பிடித்தது. அதை கைப்பற்றி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோம்.” என்று தெரிவித்தார்.

“தீப்பிடித்த மொபைலின் உரிமையாளரிடமிருந்து மேலும் தகவல்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுப்போம்.” என்று சாம்சங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பயணியின் மொபைலை விசாரணைக்காக கைப்பற்றி வைத்திருப்பதாகவும் விசாரணை முடிந்ததும் அவரிடம் ஒப்படைப்போம் என்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்