ஆப்நகரம்

சூரப்பாவை நியமித்ததில் உடன்பாடு இல்லை; மாஃபா பாண்டியராஜன்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Apr 2018, 6:32 pm
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil mafa pandiarajabn


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வலுத்து வருகிறது. கர்நாடாகாவுக்கும் தமிழகத்துக்கும் பிரச்னை உள்ள இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தாராக கர்நாடாகா மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், நாமக்கள் மாவட்டத்தில் உள்ள நரசிம்ம கோவிலில் இன்று தமிழ்வளரச்சி துறையின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை கவர்னர் நியமனம் செய்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தமிழக அரசிடம் அவர் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்