ஆப்நகரம்

ஆதார் டார்ச்சர் குறித்து புகார் கொடுக்க எளிய வழி

ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி தொந்தரவு செய்யப்படுவது குறித்து புகார் அளிக்க எளிமையான வழி உள்ளது.

TNN 14 Dec 2017, 7:54 pm
ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி தொந்தரவு செய்யப்படுவது குறித்து புகார் அளிக்க எளிமையான வழி உள்ளது.
Samayam Tamil new website helps citizens register complaints about being forced to link aadhaar with all services
ஆதார் டார்ச்சர் குறித்து புகார் கொடுக்க எளிய வழி


பல்வேறு சேவைகளை அரசு சேவைகளைப் பெறுவதை எளிமையாக்கும் விதமாக ஆதார் எண்ணை வங்கி, பான்கார்டு மற்றும் மொபைல் எண் போன்றவற்றுடன் இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அவகாசம் மார்ச் 31, 2018 வரை அளிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் ஆதார் எண்ணை இணைக்க போன் கால்கள், எஸ்எம்எஸ், ஈமெயில்கள் என பல்வேறு வழிகளில் பல நிறுவனங்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தி வருகின்றன. தேவையற்ற விஷயங்களில் ஆதார் இணைப்பு தகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் அபாயமும் உள்ளது.

இதனை தடுக்கும் விதமாக ஆதார் இணைப்பை வற்புறுத்தும் நிறுவனங்கள் பற்றி புகாரை பதிவுசெய்ய www.speakforme.in. என்ற இணையதளம் இயங்கி வருகிறது. மொத்தமாக தற்போது வரை 4000க்கு அதிகமான புகார்கள் குவித்துள்ளன.

முதல் நாளிலேயே 780 புகார்கள் பெறப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசே முன்னெடுக்கும் சேவை அல்ல. 90 தன்னார்வலர்கள் இதற்காக ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் பொதுமக்கள் எதிர்கொள்ளும் தொந்தரவைப் போக்குவதற்கு உதவ முன்வந்ததன் விளைவாகவே இந்த இணையதளம் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்