ஆப்நகரம்

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தொந்தரவா? இனி கவலை வேண்டாம்!

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் விரும்பதகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி அவற்றை புகார் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Feb 2019, 5:20 pm
வாட்ஸ்அப், பேஸ்புக்கில் விரும்பதகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி அவற்றை புகார் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil facebook


நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள், கேலி சித்திரம், வன்முறையை துண்டும் வகையிலான மிரட்டல் செய்திகள் வரும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிரபலங்கள் மட்டுமில்லாது சாமாணிய பெண்களுக்கும் இந்த தொந்தரவுகள் தற்போது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் விரும்பதகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி அவற்றை புகார் செய்யும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கமிட்டி பேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொடர்புதுறை கட்டுப்பாட்டு அதிகாரி கூறியிருப்பதாவது: ‘வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் வரும் வெறுக்கத்தக்க தகவல்களை ஸ்கீரின் ஷாட் எடுத்து, அதனை ccadn-dot.nic.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் போது வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பரையும் சேர்த்து அனுப்ப வேண்டும். இவ்வாறு வரும் புகார்களை காவல்துறைக்கும், தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது செல்போன் நிறுவனங்களின் கடமையாகும். விரும்பத்தகாத தகவல்களை வாடிக்கையாளர்கள் பெறுவது என்பது உரிமை மீறல்.’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்