ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் போலியான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நாளுக்குநாள் அதிகமாக பரவி வருகின்றன. பொய்யான தகவல்களை தடுப்பது அந்த சமூக வலைத்தளங்களை நடத்தும் நிறுவனங்களுக்கே பெரிய சவாலாக இருக்கிறது.
இதனால் மக்களிடம் தினமும் ஏராளமான வதந்திகள் உலவுகின்றன. இதனால் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தி உண்மையான தகவல்கள் பகிரப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியில் சமூக வலைத்தளங்களை மத்திய அரசு அணுகியுள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கமிட்டிக்கு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமை வகிக்கிறார். இந்த கமிட்டி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே ட்விட்டர் நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பி பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
பிப்ரவரி 7ஆம் தேதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. பின் அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்குத் தள்ளிப்போனது. ஆனால், போதிய அவகாசம் அளிக்கவில்லை எனக் கூறி ட்விட்டர் அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற கமிட்டி முன் ஆஜர் ஆகாமல் டிமிக்கி கொடுத்துவிட்டனர்.
இதனால் நாடாளுமன்றக் குழு இன்று நிறைவேற்றிய தீர்மானத்தில் ட்விட்டர் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி அல்லது வேறு உயர் அதிகாரிகளையே சந்திக்க விரும்புவதாகவும் வேறு யாரையும் சந்திக்க முடியாது எனவும் தீர்மானத்தில் கூறியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என ஆலோசிப்பது கமிட்டியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதே முயற்சியில் தேர்தல் ஆணையமும் சமூக வளைத்தளங்களுடன் பேச முயன்று வருகிறது.
இதனால் மக்களிடம் தினமும் ஏராளமான வதந்திகள் உலவுகின்றன. இதனால் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தி உண்மையான தகவல்கள் பகிரப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியில் சமூக வலைத்தளங்களை மத்திய அரசு அணுகியுள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கமிட்டிக்கு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமை வகிக்கிறார். இந்த கமிட்டி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே ட்விட்டர் நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பி பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
பிப்ரவரி 7ஆம் தேதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. பின் அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்குத் தள்ளிப்போனது. ஆனால், போதிய அவகாசம் அளிக்கவில்லை எனக் கூறி ட்விட்டர் அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற கமிட்டி முன் ஆஜர் ஆகாமல் டிமிக்கி கொடுத்துவிட்டனர்.
இதனால் நாடாளுமன்றக் குழு இன்று நிறைவேற்றிய தீர்மானத்தில் ட்விட்டர் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி அல்லது வேறு உயர் அதிகாரிகளையே சந்திக்க விரும்புவதாகவும் வேறு யாரையும் சந்திக்க முடியாது எனவும் தீர்மானத்தில் கூறியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என ஆலோசிப்பது கமிட்டியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதே முயற்சியில் தேர்தல் ஆணையமும் சமூக வளைத்தளங்களுடன் பேச முயன்று வருகிறது.