ஆப்நகரம்

அதிரடியாக விலை உயரும் ஸ்மார்ட்போன்கள்; புது அறிவிப்பை வெளியிட்ட ரியல்மி!

புதுடெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை உயரும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 10:52 am
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவை ரியல்மி 1, ரியல்மி சி1, ரியல்மி 2, ரியல்மி 2 ப்ரோ ஆகியவை ஆகும். சமீபத்தில் பேசிய ரியல்மி சி.இ.ஓ மாதவ் சேத், தங்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலை இந்தியாவில் அதிகரிக்கும்.
Samayam Tamil Realme


தீபாவளி பண்டிகைக்கு பிறகு, இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றார். பிளிப்கார்ட் இணையதளத்தில் ஏற்கனவே ரியல்மி 2 மற்றும் ரியல்மி சி1 மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு விட்டது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ரூ.8,990 என்ற விலை உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது. இதன் விலை ரூ.9,499ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே மாடலின் 4ஜிபி/64ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990 பிளிப்கார்டில் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் விலை உயருமா என்று அந்நிறுவனம் சார்பில் எந்தவித தகவலும் வெளியிடப் படவில்லை. ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் போன் ரியல்மி சி1 ரூ.6,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் விலை தற்போது ரூ.1,000 உயர்த்தப்பட்டு, ரூ.7,999 என விற்கப்படுகிறது. ரியல்மி 2 ப்ரோ மாடலின் விலை மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், விரைவில் புதிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்