ஆப்நகரம்

வருகிறது Realme 5G Smartphone! இனி தெறிக்க விடலாம்!!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ரியல்மி தற்போது 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. மிகவிரைவில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 7 Jun 2019, 2:43 pm
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ரியல்மி தற்போது 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. மிகவிரைவில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Samayam Tamil realme 5g



தொலைத்தொடர்பு சேவையில் தற்போது 4ஜி அலைக்கற்றை அமலில் உள்ளது. இதன் மூலம் 100Mbps வேகம் வரையில் நெட்வொர்க் பயன்படுத்த முடிகிறது. இதனிடையே சாம்சங் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதன்முறையாக 5ஜி ஸ்மார்ட்போனை தென்கொரியாவில் அறிமுகம் செய்தது. இதனால், உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெயரை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது. இது 4ஜி வேகத்தை விட 20 மடங்கு அதிவேகம் கொண்டதாக கூறப்படுகிறது

அதைத் தொடர்ந்து ரியல்மி நிறுவனம் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. இது முறையான சோதனைக்குப் பின் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ மாதவ் ஷேத் தெரிவித்துள்ளார். ரியல்மி 5ஜி எந்த நாட்டில் அறிமுகமாகும் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. இருப்பினும், ரியல்மி 5ஜி எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அடுத்தக்கட்டமாக இந்தியாவில் தான் மிகவிரைவில் வரும் என்றும் சிஇஒ மாதவ் ஷேத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக ரெட்மி, லெனவோ நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து வருகின்றன. லெனவோ நிறுவனம் 5ஜி லேப்டாப்பையும் தயாரித்துள்ளது. எனவே, மிகவிரைவில் இந்தியா 5ஜியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்