ஆப்நகரம்

Reliance Jio: பார்ச்சூன் பட்டியலில் உலக அளவில் முதலிடம் பிடித்த ’ஜியோ’; 'டிஜிட்டல் ஆக்சிஜன்' எனப் புகழாரம்!

’உலகை மாற்றி அமை’ என்ற பெயரில் வெளியிட்டப்பட்ட பட்டியலில் ஜியோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

Samayam Tamil 21 Aug 2018, 6:01 pm
புதுடெல்லி: ’உலகை மாற்றி அமை’ என்ற பெயரில் வெளியிட்டப்பட்ட பட்டியலில் ஜியோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
Samayam Tamil Jio


பார்ச்சூன் ‘உலகை மாற்றி அமை’(Change the World) என்ற பெயரில் ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

நிறுவனங்கள் பெறும் லாபத்தால் உலகையும், அதன் சமூக காரணிகளையும் எப்படி மாற்றி அமைக்கின்றன என்பதை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மருந்து நிறுவனமான மெர்க்(Merck), பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

சீனாவின் அலிபாபா நிறுவனம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. க்ரோகர் 6வது இடத்தையும், ஏபிபி நிறுவனம் 8வது இடத்தையும், ஹூயுக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. இணைய வசதியைப் பெறுவது ஒவ்வொரு நபரின் அடிப்படை உரிமை ஆகும்.

இதனை கடந்த 2016 கோடையில் ஐ.நா சபை உறுதிப்படுத்தியது. இந்த விஷயத்தை ஜியோ நிறுவனம் செய்து காட்டியுள்ளதாக பார்ச்சூன் தெரிவித்துள்ளது. 2016 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, 215 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று வியாபார ரீதியில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது.

இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ள பார்ச்சூன், டிஜிட்டல் ஆக்சிஜனை பொதுமக்களுக்கு அம்பானி வழங்கியுள்ளார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் 2வது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதிய ஆக்சிஜன் இன்றி காணப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.

Reliance Jio tops Fortune's Change the World list.

அடுத்த செய்தி

டிரெண்டிங்